Archivio delle Categorie: அருகனின் எழுத்துக்களின் தாக்கம்

“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ, அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…” – அருகன்

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சாம்…

sellva1“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…”

சபாஸ்… தமிழரசுக்கட்சி அமோக வெற்றி… கேட்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கின்றது. அதிகாரத்தைக்கையில் எடுக்கும் முன் சற்றுச் சிந்திக்க வேண்டியப ல விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றது என்பதனை ஐயா சம்மந்தன் அவர்களும் மற்றும் தமிழ் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

Leggi l’articolo completo

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01) -2

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01)

மற்றைய வரலாறுகள் கற்றுத்தரும் பாடங்களிலும் பார்க்க, நடைமுறையில் அதிக பாடங்களைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழர்களின் கடந்த முப்பது வருட சம்பவங்களில், தமிழர்களே கற்றுக்கொள்ள வேண்டிய பல லட்சக்கணக்கான பாடங்கள் புதைந்து கிடக்கின்றது.

Leggi l’articolo completo

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01)

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01)

Inserisci qui la didascalia video

மற்றைய வரலாறுகள் கற்றுத்தரும் பாடங்களிலும் பார்க்க, நடைமுறையில் அதிக பாடங்களைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழர்களின் கடந்த முப்பது வருட சம்பவங்களில், தமிழர்களே கற்றுக்கொள்ள வேண்டிய பல லட்சக்கணக்கான பாடங்கள் புதைந்து கிடக்கின்றது.

வரலாறு தொடர்பாக ஆதாரங்காட்டி எழுதும் எழுத்தாளர்கள், மற்றும் விமர்சகர்களுக்கு ஈழத்து வரலாறே படிப்பினையாகவும், நடைமுறை ஆதாரமுமாக இருக்கும் போது அந்நிய வரலாற்றில் பாடங்கற்பிப்பது தேவையற்றது என்று எண்ணத்தோன்றுகின்றது.

இன்றைய நடைமுறையிலேயே பல உண்மைகள் வெளிப்படாமல் இருக்கும் போது, பலவருடங்கள் கடந்த அதிலும் அந்நிய வரலாற்றில் காணப்படும் சம்பவங்கள் மட்டும் எப்படி உண்மையானது என்று ஆதாரங்காட்ட முடியும் என்ற கேள்வி எழவில்லையா?… சந்திரிக்கா அம்மையார் உயிருடன்தான் இருக்கின்றார், மகிந்தவும் உயிருடன்தான் இருக்கின்றார், புலிகளின் பல தலைவர்களும் புலிகள் அமைப்பின் பல முப்கியஸ்தர்களும் இன்னும் உயிருடன்தான் இருக்கின்றார்கள்… அப்படி இருக்கும் போது இறுதிக்கட்டப் போரில் நடந்த பல சம்பவங்கள் இன்னும் மறைவாகவே இருக்கின்ற போது, அவ்வாறான சம்பவங்களை துருவி ஆராய்ந்து சரித்திரத்தில் உண்மையினைப்பதிக்க முடியாத ஆராட்சியாளர்கள் பல வருடங்கள் கடந்த பின்னர் ஆதாரங்கள் என்று சொல்லும் அல்லது சொல்லப்போகும் முடிவுகளை உண்மை என்று உறுதிப்படுத்துபவர்கள்யார்???

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை சிங்கள அரசு தூக்கி வைக்கப்போவதில்லை, அதுபோல மகிந்தவின் சிறப்புக்களை எப்போதும் புலிகள் இயக்க இயங்கும் உறுப்பினர்கள் மேன்மைப்படுத்தப்போவதில்லை… இப்படி இருக்கும் போது எப்படி உண்மை நிலைக்கும்!!???

கனடாவில் தமிழர்களுக்கிடையில் பிளவு, சுவிஸ் தேசத்தில் அதே போன்று பல பிளவுகள், நாடுகடந்த அரசு என்ற அமைப்பிற்குள் இன்னும் சிக்கல்கள்-பிளவுகள், முன்னாள் புலிகள் அமைப்பினருக்குள் பிளவுகள், தன்னிச்சையாக தமிழர்களுக்கு ஆயிரம் நன்மைகளைச் செய்வோரை ஏற்றுக்கொள்ள மற்றைய அமைப்புக்களும், சாராத தமிழ் ஊடகங்களும் மறுப்பும் மறைப்பும்,
… … இப்படி இருக்கும் போது யார் யாரை வரலாற்றில் பதியப்போகின்றார்கள். அது எப்படி வரலாற்றில் பதியப்படப்போகின்றது.

ஒரு இணையத்தில் தவறுதலாக வெளியிட்ட சம்பவத்தையோ அல்லது செய்தியையோ, திருத்துவதற்கும், தவற்றை ஏற்று மாற்று கருத்தை விடுவதற்கும் இன்றுள்ள எந்த ஊடகம் முன்நிற்கின்றது?

தமிழர்கள் நாம் போராட்டங்களை மேற்கொள்கின்றோம், ஆனால் யாரும் நேரடியாக தலைகொடுக்க மறுக்கின்றார்கள்! சுpங்கள அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்க முன்வலும் தமிழர்களை பார்த்தால் அவர்கள் வேறு தேசியத்தை உடையவர்களாகக்காணப்படுகின்றார்கள்… மின்னஞ்சல்கள் மற்றும் இணைய நடத்துனர்கள் யாரும் தமது சொந்த பெயரை இட்டதாகக்காணவில்லை. தும்மைப்பற்றி மற்றைய தமிழர்களுக்கு மறைவாக வெளிப்படுத்தவே முயல்கின்றார்கள், அதற்கு பாதுகாப்புக்காரணம் என்ற ஒன்றைக் கூறினால், யாரிடம் இருந்து பாதுகாப்பு என்ற கேள்வி எழுகின்றதல்லவா? … அவ்வாறு இருப்பின் நீதியான கோரிக்கைகளுக்காகப்போராடும் போது ஏன் மறைவாக இருக்க வேண்டும் என்ற இன்னொரு கேள்வியும் வெளிப்படுகின்றதல்லவா? ஒரு தனி அரசை நடாத்திய புலிகள்கூட சர்வதேசத்தில் அதிலும் நோர்வேக்குச் செல்லவோ அல்லது வேறு தேசத்திற்குச்செல்லவோ “தமிழீழத் தேசிய கடவுச்சீட்டை” பாவிக்கவில்லை என்பது பெரும் வேதனையினைத்தருகின்றது!!!.

உலகத்தில் அன்றைய நடைமுறை அரசிற்கு எதிராகச்செயற்பட்ட பல தலைவர்களின் வலறாற்றுப் பதிவு என்று சொல்லப்படுகின்ற ஆதாரங்களைப்பார்க்கும் போது, அத்தகவல்களை மறைத்து வைப்பதற்கே விரும்புகின்றனர். அது அத்தலைவர்களைப் பின்பற்றும் மற்றையவர்களுக்கு ஒரு துணிச்சலையும் அவர்களைச் சான்று வெளிப்படுகின்றவர்களுக்கு ஒரு திடத்தையும் கொடுக்கும் என்ற உளவியல் போக்கே காரணம்.  ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எப்படி வரலாற்றை எதிர்காலத்திற்கு உண்மையாக வழங்கமுடியும்?

கடந்த 2003ம் ஆண்டு எனது நூல் வெளியீட்டின்போது அந்நூலிற்கான விமர்சனத்தை மேற்கொண்ட ஒரு நபர் தனது பேச்சில் “ புலிகளின் தலைவரைப்பற்றி மிகச்சிறப்பாகவும், உயர்வாகவும்” பேசித்தள்ளினார். ஆனால் அந்த பேச்சின் காட்சிகளை 2009க்கு பிற்பட்ட காலத்தில் இணையத்தில் இருந்து அகற்றிவிடும்படி வலியுறுத்தினார்… இதில் இருந்து அத்தலைவனுக்காக அவர் ஏற்கனவே பேசிய வார்த்தைகளிற்கு எத்தனை தூரம் முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்றும் அத்தலைவன்மீது வைத்த விசுவாசம் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்ற சந்தேகம் எழத்தோன்றவில்லையா?

ஏற்கனவே “மலரும் மா தமிழீழம்” என்ற எனது 2007ம் ஆண்டு நாவலில் குறிப்பிட்டது போல் “இவர்களை நம்பியா எமது தமிழீழத்தை இவர்களிடம் ஒப்படைப்பது?” என்ற கேள்வி இப்போது அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. அதே நூலில் எழுதப்பட்ட இன்னொரு விடயம் நாளை தமிழீழம் மலரும் போது தமிழீழ தூதராலயத்தில் அவ்வாறானவர்களையா அமர்த்தப்போகின்றோம் என்ற கேள்விகளும் எழுகின்றதல்லவா?

தூதராலயம் என்றதும் இடையறுத்த கேள்வி ஒன்று எழுகின்றது! அதுவாகில் நா.க.அ. என்ற ஒரு மிகப்பெரிய திட்டத்தை ஆரம்பித்துள்ள எமது புத்திஜீவிகள் அதற்கான காரியாலயங்களை ஆரம்பிக்கும் முன்னர் தூதராலயத்தை ஆரம்பித்துள்ளமை சிரிப்பாக உள்ளது! இது அவர்களை கேவலப்படுத்தவல்ல, மாறாக எடுக்கும் காரியங்களில் ஆணித்தனமான அத்துpவாரம் இருக்க வேண்டும் என்பதற்காகவே! குனடாலில் ஏராளம் தமிழர்கள் இருக்கின்றார்கள், பிரித்தானியாவில் ஏராளம் தமிழர்கள் இருக்கின்றார்கள், சுவிசில் பெரும் தமிழ் விசுவாசிகள் இருக்கின்றார்கள்… இப்படி இருக்கும் போது அங்கெல்லாம் அலுவலகங்களை அமைக்காமல், அல்லது தூதராலயங்களை அமைக்காமல் எங்கோ கொண்டு தூதராலயத்தை அமைத்தமை திடமற்ற செயலைக்காட்டுகின்றது. மேலும் அத்தூதராலயங்களில் யார் எதை நோக்கி அணுகப் போகின்றார்கள் என்ற கேள்விகளும் உள…
நான் சில அமைப்புக்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றேன். ஆவ்வமைப்புக்கள் ஒவ்வொன்றிலும் அதற்கான செயற்பாடுகள் இருக்கின்றன. ஏவ்வாறான செயற்பாடுகளை அவ்வமைப்பு மேற்கொள்கின்றன என்ற வெளிப்படையான ஒரு அறிக்கையே காணப்படுகின்றது. இது இப்படி இருக்க நான் ஒரு தமிழீழப்பிரஜையாக நா.க.அ. அணுகவேண்டி பல தொடர்புகளை மேற்கொண்டு பார்த்தேன். ஆவை ஒன்றுக்குக்கூட பதில் வந்ததாக இல்லை! மேலும் காலத்திற்குக்காலம் ஒரு இணையம், காலத்திற்குக்காலம் ஒரு மின்னஞ்சல்… இது தனது குடிமக்களையே அந்த அரசு அவமதிப்பதாகத்தோன்றாதா?

திரு உருத்திர குமார் அவர்களுக்க ஒரு ஆலோசனை வழங்க முனைகின்றேன். தங்கள் பேச்சில் வசனங்களில் “நான்” என்ன உச்சரிப்பின் ஆரம்பங்களும் நாங்கள் என்ற வசனத்தின் முடிவுகளுமே அதிகமாகக்காணப்படுகின்றது. அவற்றை இனிவரும் தங்கள் பேச்சுக்களின் சீர் திருத்திக்கொள்ள வேண்டுகின்றேன். ஊங்கள் செயற்பாடுகளில் முன்னேற்றம் இருந்தாலும் தங்கள் வழங்குகின்ற பேச்சுக்களால் தங்கள் தரம் தமிழில் குறைவென்ற ஐயப்பாடு புலத்தில் வாழ்கின்ற இழையோர் மத்தியில் தோன்றிவிடக்கூடாது என்பதற்காகவே எடுத்க்காட்ட நேர்ந்தது. ஆத்துடன் பல தமிழர்கள் ஊடகங்களில் பேசும் போது சம்மந்தமற்ற இடத்திலெல்லாம் “அதாவது” என்ற பதத்தைப்பயன்னடுத்தும் போது மிகவும் கேவலமாக இருக்கின்றது. தமிழுக்காகப்போராடுகின்றோம் தமிழை பேசுவதில் கோட்டை விடுகின்றோம். அதற்றாக இலக்கணத்தில் அல்லது இலக்கியத்தில் பேசச்சொல்லவில்லை ஆங்கில உச்சரிப்பில் பேசினால் கூட அல்லது ஆங்கிலத்தையோ வேற்று மொழியையோ இணைத்துப் பேசினால் கூட பொருத்தமான இடத்தில் பொருத்தமான சொற்களைப்பயன்படுத்த கேட்கின்றேன். காரணம் இன்றுள்ள நிலையில் தமிழர்கள் அல்லாத பலர் தமிழை முறையோடு பேசக்கற்றுக்கொண்டிருக்கும் போது தமிழர்கள் தமிழை தவறாகப்பேசிக்கொள்வது முறையாகவா காணப்படும். என்னிடம் பல இத்தாலியர்கள் தமிழ் கற்றுக்கொண்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் கற்கும் போது தமிழர்களிலும் பார்க்க அதிக விரைவாக கற்றுக்கொண்டார்கள் என்றால் நாளை அவர்களிடம் நாம் கற்கவேண்டிய அவல நிலை வந்து விடக்கூடாதல்லவா? உதாரணம் ஏற்கனவே வீரமா முனிவர் மூலம் வரலாறு விட்டுச்சென்ற சம்பவங்கள் உள.  

– தொடரும்

நாடுகடந்த அரசின் மகளீர் தின அறிக்கை இவ்வாறு இருந்தால்???…!!!

animaliநாடுகடந்த அரசின் மகளீர் தின அறிக்கை இவ்வாறு இருந்தால்???…!!!  உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு, எத்தனை பலனுடையதாக அமையும்….!!!

எத்தனை வேதனைகளைக் கடந்து வந்திருந்த போதிலும் ஏதுமே நடாக்காதது போல், அவ்வப்போது அறிக்கைகளும், நிகழ்வுகளும், முடிவுகளும் வந்த வண்ணமே இருக்கின்றன.

Leggi l’articolo completo

புலிகளின் சர்வதேசப்பலத்தை வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை, போராட்டம் ஆரம்பிக்கபட்ட பின்பே சர்வதேச பலம் புலிகளுக்கு அதிகரித்தது

20091231_04e

( http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=3864:2010-06-08-15-17-02&catid=56:2009-12-16-09-40-29&Itemid=412 )

தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல்கொடுத்தால் உலகத்தின் மனித நடமாட்டம் இல்லாத பனிப்பாறைகள் மட்டும் எதிரொலிக்கும்…

புலிகள் சிதைவுற்று இருப்பதென்னவோ உண்மையே! ஆனால் அது தற்காலகச் சிதைவேயொழிய நிரந்தரமானவையல்ல! ஒரு முனைப்போரால் இத்தனை காலமும் புலிகள் தமிழர்களுக்காகப் போராடியது வரலாறாக இருக்கின்றபோது, இனி சர்வதேச ரீதியில் பல்முனைத் தாக்குதலால் இலங்கை அரசு திணறும் அளவிற்கு “தாக்குதல்“ நடக்கத்தான் போகின்றது. அது ஆயுதத்தாக்குதலிலும் பார்க்க மிகக்கோரமான தாக்குதலை இலங்கை சிங்கள அரசு சந்திக்கபோகின்றது.

புலிக்கு காட்டில் வேலை இருக்கோ இல்லையோ, இனி நாட்டில் வேலை அதிகமாகவே இருக்கு என்பதனை இலங்கை அரசு மிக தெளிவாகப் புரிந்து கொள்ளத்தான் போகின்றது. புலி பாய்ந்ததையும் பதுங்கியதையும் பார்த்த இலங்கை அரசு அவர்களின் தந்திரத்தையும் சர்வதேசத் தாக்குதலையும் பார்க்கும் படி இலங்கை அரசே தூண்டி விடுகின்றது.

புலிகளை சர்வதேசத்திற்கு மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தியதே இலங்கை அரசுதான் என்றால் அது மிகையில்லை… அமேரிக்கா குண்டு வெடிப்பிற்கும் புலிகளுக்கும் முடிச்சுப்போட்ட அந்தக்காலத்து சந்திரிக்கா அம்மையாரே புலிகளின் சிறப்பையும் புலிகளையும் சர்வதேசத்திற்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது புலிகளின் ஆயுதப்பலமே தமிழீழத்தை பெற்றெடுக்கப் போதுமானதாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இலங்கையினை அண்மித்த நாடுகளின் திடமற்ற போக்குகள்… மற்றும் புலிகளின் உரிமைப்போரை மற்றைய நாட்டுத்தீவிரவாத போருடன் ஒப்பிட்டமை போன்ற விடயமே புலிகளை அழிப்பதற்கு அயல்நாடுகள் கங்கணம் கட்டியது. அந்தவகையில் ஆயுதப்போராட்டத்தின் அடுத்த கட்ட பரினாமத்திற்கு உந்துகோலாக மிஸ்டர் மகிந்த அரசு அத்திவாரமிட்டு கொடுத்துள்ளது. அதாவது, ஆயுதப்போராட்டம் வஞ்சகங்களால் நசுக்கப்பட்ட போதிலும் அது புலிகளுக்கு ஒரு பாடத்தைக்கற்றுக் கொடுத்திருக்கின்றது. அந்த கற்கையின் முறைப்படி அடுத்த கட்ட நகர்வுகளை எடுத்து, முன்பிலும் பார்க்க பலத்துடன் பக்க ஆதரவுடன் மாற்று வடிவப்போர் தொடங்கும். ஆயுதத்தால் அடிக்கும் அடியிலும் பார்க்க இலங்கை அரசு கதிகலங்கக்கூடிய பாரிய இடியாக அது இலங்கை அரசின் தலையைத் தாக்கப்போகின்றது.

இலங்கை அரசின் சூழ்ச்சிக்குள் சில தமிழர்கள் விலைபோனதன் காரணமே புலிகளின் தோல்விக்கு முக்கனியம் எனலாம். “எரித்திரியா” போன்ற பல இடங்களில் இருந்து உட்புகவேண்டிய தொடர்புகள் அறுபட்டதன் காரணம் வன்னிப் பேரவலத்தை மக்களும், புலிகளும் சந்திக்க நேர்ந்தது. அந்த வஞ்சகங்கள் திடமாகவும் தலைநிமிர்ந்தும் இன்று நடைபோடலாம் அதில் மாற்றமில்லை. ஆனால், வன்னிப் பேரவலத்தின் ஆத்மாக்களின் சாபமும், அவர்களின் ஓலமிட்ட அழுகுரலும், மரண வேதனைகளும் அவர்களை நிம்மதியான வாழ்வை பெற்றுக்கொடுக்கத்தடையா இருக்கும். “இருள் ஒன்று விடிவில் முடிவடையுமே ஒழிய இருளோடே தொடராது…” அது போல தோல்விகளையே புலிகள் சந்திக்காதவர்கள் இல்லை, தோல்விகளில் தோய்ந்து தோய்ந்தே புலிகளில் பலம் ஓங்கி உலகெல்லாம் ஒலித்தது. புலிகளை முன்பிருந்ததிலும் பார்க்க பலமாகக்கொணரக்கூடிய வல்லமை தமிழர்களுக்கு இன்னும் இருக்கின்றது. சிங்கள இனம் பெருந்தொகையினராக இருக்கலாம், சிங்கள இனம் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் குரல் ஓசையிலும் பாக்க சிறுபான்னையாக இருக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல்கொடுத்தால் ஒலகத்தின் மனித நடமாட்டம் இல்லாத பனிப்பாறைகள் மட்டும் எதிரொலிக்கும்…
இன்னமும் தமிழர்கள் புலிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை இழக்கவில்லை, தலைவன் இருக்கிறானோ இல்லையோ அவன் திட்டத்தை வல்லவாக வகுக்கக்கூடியவன் என்பதனை இந்திய வல்லரசின் றோவினர் நன்கு அறிவார்கள். பெருந்தொகையான ஆயுதத்தைக் கொட்டி கொட்டி இந்தியாவிடம் கையளித்தபோதிலும், அந்த இந்தியாவையே எதிர்த்துப்போராடும் அளவிற்கு மேலும் ஆயுதம் புலிகளிடம் எங்கிருந்து எப்படி வந்தது என்று சிந்திக்கவேண்டும். எனவே தலைவனின் இறுதித் திட்டம் விதைக்கப்பட்டிருக்காமல் அவன் இந்த பூமியை விட்டு போயிருக்க மாட்டான். இந்த நேரத்தில் சுதுமலை பிரகண்டனத்தை நினைவூட்டுகின்றேன்… தனது திட்டம் எத்தகையது என்பதனை அக்குவேறு ஆணிவேறாகத் தொகுக்கக்கூடியவன் என்ற வகையில் அவன் இறப்பினும் அவன் ஆழுமை நிலைக்கக்கூடியது என்பதால் புலிகளின் பலம் ஓயப்போவதில்லை!

புலிகளின் சர்வதேசப்பலத்தை வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை, போராட்டம் ஆரம்பிக்கபட்ட பின்பே சர்வதேச பலம் புலிகளுக்கு அதிகரித்தது. புலிகளுக்கு சர்வதேசத்தின் நாமறியாத பல விடயங்கள் இன்னமும் இயங்கியே வருகின்றன. விளக்கெண்ணையினை கொழுத்திவிட்டு இருக்கின்ற இந்தியக்கடல் எல்லைக்குள் புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியாதளவிற்கு அவர்களுடைய போக்குவரத்து இருந்ததென்றால் அவர்களின் செயற்பாட்டையும் திட்டத்தையும் அணுகுமுறையினையும் என்ன வென்பது.       

இன்று புலிகளின் பிளவு தமிழர்களின் பின்னடைவென்பதனை சிங்கள அரசு கைகொட்டிச் சிரிக்கின்றது. தமிழ்க் குழந்தைகளின் சின்னஞ்சிறு சிரசில் சிங்கள இராணுவத்தின் பாதரட்சைகள் பதியும் அளவிற்கு கோரதாண்டவம் நடைபெற்ற போதிலும் சர்வதேசத்தின் கண்கள் தூங்கியே இருந்தது. ஆனால் அந்த வடு உயிரோட்டம் உள்ள தமிழர்களின் நெஞ்சில் அணையா கொதிக்குழம்பாய் எரிமலைதீப்பிளம்பாய் முட்டி நிற்கின்றது. அதன் வெடிப்பு காலம் வரும்போது பிரதிபலிப்பு என்னவென்பது இலங்கை அரசு புரிந்து கொள்ளத்தான் போகினக்றது. சிங்கள அரசு எதை எமது பலவீகனம் என்று கருதியுள்ளதோ அதுவே தற்போது எமது பலம்.

அதாவது, தமிழர்கள் ஆளாளுக்குப்பிரிந்திருக்கின்றார்கள்!, புலிகள் உட்பிளவில் சரிந்திருக்கின்றார்கள்!!, அமைப்புக்கள் சிதைவடைந்து கிடக்கின்றன!!!, இலங்கையில் இருந்த தமிழீழப் போராட்த்தை புலத்தில் ஓடவைத்துவிட்டோம் என்று வீராப்பு கொட்டுகின்றன!!!, தமிழர்களுக் கிடையிலான ஒற்றுமையினையும் சமரச தொடர்புகளையும் செயலிழக்கச் செய்து விட்டதாக பகற்கனவு காணுகின்றது!!!,… ஆனால் அதுவே தமிழர்களின் பெரும் பலத்தை உருவாக்கக்காரணமாக அமையப்போகின்றது. இன்று இணையங்கள், அமைப்புக்கள், தமிழர்களின் செயற்பாடுகள் போன்றன சர்வதேசத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தவகையில் ஒரு நெல்விதையில் இருந்து பெறப்படுகின்ற நெல்மணிகள் அந்த ஒன்றை விட அதிகமானது, ஒரு மூட்டை நெல்லை விதைத்து ஒவ்வொரு நெற்கதிரும் கொடுக்கின்ற பலனைப்பார்க்கும் போது ஏராளமான நெல்மணிகள் பலமூட்டைகளில் சேர்க்கப்படுகின்றதைப்போல், ஆங்காங்கே சர்வதேச அரசியலில் கால்பதிப்பதற்கு இன்றுள்ள நிலை எமக்குச் சாதகமாகவே இருக்கின்றது… ஒரு சந்தர்ப்பம் வரும் அப்போது தமிழர்களின் அனைத்து சிதறுண்ட பாகங்களும் இணையும் அது இலங்கை அரசின் பலத்திலும் அதிகமாக சக்திவாய்ந்ததாக உருவெடுக்கும். அந்த சந்தர்ப்பம் மிக விரைவில் வெளிப்படும்.    

இயேசு கிறீஸ்துவை ஒழித்துக்கட்டினால் அவருடைய போதனை ஒழிந்து விடும் என்று அன்றைய அரசு நினைத்தே அவரை சிலுவையில் அறைந்தது. ஆனால் அவருடைய மரணத்தின்பின்னர் 12 அப்போஸ்தலருடன் புறப்பட்ட பயணம் இன்று உலகத்தையே ஆட்கொள்ளவில்லையா? அது எப்படி சாத்தியமானதோ அப்படியே தமிழர்களின், புலிகளின் திட்டம் ஒருபோதும் தவிடுபொடியாகாது. பன்னிரெண்டு பேர்கொண்ட அந்த திட்டம் உலகையே ஆட்கொண்டதென்றால், உலகையே ஆட்கொண்டுள்ள தமிழர்களாலா இலங்கையை ஆட்சியெச்ய முடியாது???

சிங்கள இராணுவம் தமிழினத்தின் மேல் சிந்திய இரத்தக்கறை, சரித்திரத்தில் அழிவா வடுவை அந்த இனத்திற்கே கொண்டு சேர்த்திருக்கின்றது. சூழ்ச்சியை சூழ்ச்சியாலேயே வெல்லமுடியும். தந்திரத்தை தந்திரத்தாலே வெல்லமுடியம்… ஆனால் பலம்பொருந்திய எதிரியை பலத்தால் அழிப்பதிலும் பார்க்க சாணக்கியத்தால் அழிப்பதே தலைசிறந்தது. சுpங்களவர்கள் அடித்த அடியில் புலி அடியோடு பலி என்றே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் சுணாமிபோல், பிமியே அதிரும்படி சர்வதேசத்தாக்குதலை எதிர்பாராத நேரத்தில் உட்கசப்புகள் நிகழ்ந்தமையால் ஏற்பட்ட பின்னடைவு அதே சர்வதேசத்தில் இருந்து இனித்தாக்கப்போகின்ற தாக்கத்தால் சிங்கள அரசே நிலைகுலையும் அளவிற்கு பலமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகின்றது என்பது மறைக்கப்பட்ட செயற்பாடுகள்.

இறுதி யுத்தம் என்று இலங்கை அரசால் வர்ணிக்கப்படுகின்ற தமிழர்களின் அவலம் அந்த அரசிற்கே அவமானம் என்பதனை உணர மறுக்கின்றது. ஒரே தேசத்திற்குள் இருக்கும் இனத்தை தீவிரவாதம் என்ற போர்வையில் லட்சக்கணக்கான தமிழர்களை நீங்காத பாதிப்பிற்குள் கொண்டுசென்றமை சிறப்பான செயலோ? ஒரு நாட்டில் குடிமக்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாத வகையிலே குற்றச் செயல்களைக் கழையவேண்டுமே ஒழிய, இயலாமை காரணத்தால் ஒரு எதிர்ப்பை சமாளிக்க ஒரு தேசத்தையே அழித்து அதில் தனது கொடியை ஏற்றுவது ஒரு சிறப்பான விடயமோ???

இன்றுவரை தமிழர்களுக்காக போராடிய புலிகளும் சரி, மற்றைய முன்னைய போராட்ட அமைப்புக்களும்சரி தமது உரிமைக் கோரிக்கைகளுக்காக  இலங்கை அரசை எதிர்த்ததே ஒழிய, சிங்கள மக்களை அழித்ததாகச் சரித்திரத்தில் இடமே இல்லை! அந்தவகையில் புலிகளின் பால் மனிதாபிமானம் செறிந்தே கிடக்கின்றன. புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சர்வாதிகாரப் போக்கையும் தவறான ஆட்சியாளர்களையும் எதிர்த்திருந்ததே ஒழிய சாதாரண சிங்கள குடிமக்களை அழிப்பதற்கு கங்கணம் கட்டவில்லை. சில சிங்களக்காடையரின் போக்கில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நீங்காப்பகையினை ஏற்படுத்த மேற்கொண்ட ஆரம்ப செயற்பாடே இன்று சிங்கள மக்களையே தமிழர்கள் அரக்கரைப்போன்று பார்க்கத்தோன்றியுள்ளது… தொடரும் – அருகன்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை வென்றெடுக்க தேர்தலே தகுந்த பரிட்சை

 

இலங்கை அரசியலும், தமிழர்களின் உரிமைகளும்… அருகன்.

 

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை வென்றெடுக்க தேர்தலே தகுந்த பரிட்சை

இலங்கை அரசியலும், தமிழர்களின் உரிமைகளும்…

கடந்த சில மாதங்களின் முன்பு இலங்கைத்தீவில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, இலங்கைத்தூதராலயத்தால் இத்தாலி றோம் நகரில் நடாத்தப்பட்ட கலாசார நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பில் குறிப்பிட்ட அமைப்பாலும் சில கலைநிகழ்ச்சிகளும் இலங்கை அதிபர் உயர்திரு மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கான விண்ணப்ப மனுவும் கையளிக்கப்பட்டது. அவ்வேளையில் இத்தாலியின் இலங்கைத்தூதராலயத்தின் தூதுவர் அவர்கள் தனது உரையில் எடுத்துக்காட்டிய ஒருவிடயத்தை இங்கு மீட்டுக்கொள்ள விரும்புகின்றேன். சிங்கள மக்களுக்காக இலங்கையின் வரலாறு 2500வருடங்கள் ஆனால் தமிழர்களின் இலங்கை வரலாறு என்னது 5000வருடங்களுக்கும் மேல் என்று ஆணித்தனமாக எடுத்துரைத்தார். அதற்கான ஆதாரம் இணையத்தில் கூட வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.youtube.com/arugan2009

http://www.youtube.com/watch?v=EUeIqHTTExM

 

எதுவாகிலும் இன்று இலங்கை என்ற தாய்நாட்டுக்குள் ஒன்றுபட்ட நிலையில் உயிர்சேதமின்றி அனைவரும் சமமாக வாழக்கூடிய வழியினை இன்றைய அரசு தலைவர் பெற்றுத்தந்திருக்கின்றார். கடந்த முப்பது வருடங்களில் இடம்பெறாத மனிதாபிமான நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.இதற்குக்காரணம் யார்?… முன்மு இதற்கு மாறாக கேடுகெட்ட நிலையில் எமது தேசம் சென்றமைக்குக்காரணம்தான் யார்???

இதன்நோக்கம் யாரையும் குற்றப்படுத்துவதல்ல மாறாக தவறுகளைச்சுட்டிக்காட்டுவதன்மூலம், தவறுகள் நடக்காது தடுப்பதே நோக்கமாகும்.  கடந்த காலத்தில் ஜ.தே.கட்சியின் அனைத்து அணுகுமுறைகளுமே தமிழர்களின் தொடர் அழிவிற்கும் புலிகளின் வளர்ச்சிக்கும் காரணம் என்றால் அதற்கு ஆதாரம் ஏலவே குவிந்து கிடக்கின்றது. அதுமட்டுமல்லாது, ஒருவிடயத்தை மேற்கொள்வதற்கு காலதாமதம் எடுப்பது அதைவிட மோசமானதொன்று… அதே தவறினை மீண்டும் மிண்டும் மக்கள் விடாது கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தற்போதைய அரசினை மேலும் பலப்படுத்த வேண்டும். அதன்மூலம் தமிழர்களின் முழு உரிமையினை ஏன் தனி அரசைக்கூட அமைத்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

1987ஆம் ஆண்டில், இந்த உள்நாட்டுப் போருக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தமொன்றின்படி இந்தியா அமைதிகாக்கும் படையொன்றை இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பியது. முரண்பாடுகளில் சம்பந்தப்பட்ட முக்கிய தரப்புகளில் ஒன்றான தமிழர் தரப்பை நேரடியாகச் சம்பந்தப்படுத்தாத இந்த ஒப்பந்தம், இந்திய அமைதி காக்கும் படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையில் போர் மூழச்செய்ததை இன்றும் மறக்கமுடியாது.அதன்மூலம்  ஏற்பட்ட போருடன், இழப்புகள் கூடிய சேதத்தில் முடிந்தது. 2001 ஆம் ஆண்டில், சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நோர்வே முன் வந்ததையடுத்து, அந்நாட்டின் அனுசரணையுடன், போர்நிறுத்த ஒப்பந்தமொன்று நடைமுறைக்கு வந்ததுடன், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. சில காரணங்களால், பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தி வைக்கப் பட்டிருந்தாலும், போர் நிறுத்தமும், சமாதான முயற்சிகளும் 2007 ஆம் ஆண்டு வரையில் இலங்கை ல் நடைமுறையில் இருந்து வந்தன.

இந்நிலையினைக்காரணங்காட்டி ஏன் ஒரு நீதியான தீர்வினை அன்றைய அரசு முன்வைக்கவில்லை என்ற கேள்வி இன்று மிக அவசியமானவை . முன்னைய அரசாங்கங்கள் இலங்கை அரசினை சீர்கெடுத்து வந்த சூழ்நிலையினைக் குறுகிய காலத்தில் சீர்செய்த பெருமையுடைய தற்போதைய அதிபர் போற்றப்படவேண்டியவர். இவருடைய போக்கு எதிர்கட்சிகளையோ மாற்றுக்கட்சிகளையோ காலப்போக்கில் அழிந்து ஆழுங்கட்சியின் ஒருபிரிவே எதிர்க்கட்சி என்று மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தற்போதைய ஆழுங்கட்சியினைத் திரும்பிப்பார்த்தால், அன்று பலமிக்கதாக இருந்த ஜ.தே.கட்சியின் முதலாளித்துவ வர்க்கப்போக்கினை எதிர்த்து 1951 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் முறையாக 1956 இல் ஆட்சியமைத்தது அது முதல் பல முறைகளில் ஆட்சி அமைத்துள்ளது. இ.சு.க புரட்சியற்ற சோசலிச கொள்கையை கைப்பிடித்ததோடு சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது. மகிந்த ஆட்சியில், அது நாட்டின் தேசிய நலன்கருதி இராணுவ முறையினைக்கையாண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2 – 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6மூ வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் இலங்கை சனாதிபதி தேர்தல், 2005 இல் இ.சு.க. வேட்பாளர் மகிந்த ராஜபக்ச 50.3வீத வாகுகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.

இந்த இடத்தில்தான் நாம் முக்கிய விடயத்தைக்கவனிக்க வேண்டும். அதாவது, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க அவர்களின் வரலாற்றையும் அரசியல் காலத்தில் இடம்பெற்றதகவல்களையும், அவர் இறப்பின் நிகழ்வினையும் அவரின் மதத்தினையும் சற்று அலசிப்பார்த்தேமேயானால், பல உண்மைகள் வெளிவர வாய்ப்புண்டு. ஆரம்ப காலத்தில் இருந்தே சிங்கள வர்க்கத்தின் ஒருசிலரால் தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் பாதிக்கப்பட்டதென்பது உண்மையே!!! சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆரம்ப கால முக்கியஸ்தரும், முன்னாள் பிரதமருமான இவரை சிங்களவர்களே சுட்டுக்கொன்றனர். காரணம் பலவிருந்தும் அவர் ஒரு பௌத்தரல்லாதவர் என்பதே மிகமுக்கியமாகக் கருதப்படுகின்ற போதிலும் அவர் ஒரு பௌத்தராகவே தன்னை அரசியல் நோக்கத்திற்காக அமைத்துக்கொண்டார் என்பதே முக்கிய காரணம் என்றேஎன்னால் உணரப்படுகின்றது. எனவே பௌத்தனல்லாத யாரையும் இலங்கையில் அதிபராக்கக்கூடாது என பௌத்தவாதிகள் பலமாக இருக்கின்றனர். இவை எல்லாவற்றையும் முறியடித்து அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த எமக்குக்கிடைத்த ஒரேயொரு தலைமையாளராக தமிழருக்குக்கிடைத்த இலங்கை அதிபரை நல்லமுறையில் பணன்படுத்திளால் தமிழர்களின் எதிர்காலம் விடிவுநோக்கி நடைபோடும் என்பதில் ஐயமில்லை.

முன்னாள் அதிபர் பிரேமதாசாவை புலிகள் கொன்றனர் என்று அவர்களை தீவிர வாதிபட்டியவில் சேர்த்தனர். ஆனால்  எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க அவர்களை சுட்டுக்கொன்ற அந்த மதகுருவை என்ன செய்தார்கள்…  அவர் பரம்பரையில் தம்மை பௌத்தர்களாக்கிக்கொண்டு தன்னை அதிபராக்கிய அவர் புதல்வியாலோ மனைவியாலோ தீர்வு காணப்படாத நிலையில் குறுகிய காலத்தில் தமிழர்களுக்கான புதுவழியைக்காட்டியதோடு, யத்த நிலையிலும் திடீர் மாற்றத்தைக் கொணர்ந்தார். தமிழில் தானும் உரையாட முயற்சித்து தன்னையும் ஒரு தமிழன்போல் மக்களோடு மக்களாக உங்களில் ஒருவனாக நாட்டின் அமைதிக்காய் அர்ப்பணித்திருக்கும் தற்போதைய அதிபர் நிரந்தரமாக பதியில் அமர தமிழர்கள் தங்கள் ஆதரவை அவருக்கு வழங்க வேண்டும். இது தேர்தல் காலத்தில் எழுதப்படுவதால் ஒரு அரசியல் விமர்சனமாக கருதாது, தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக கருதவேண்டும் என்று விரும்புகின்றேன்.   

         
கடந்த வரலாறுகளில் எமக்கு ஏராளம் படிப்பினைகள் இல்லாமல் இல்லை. அப்படிப்பினைகள் போதும் எதிர்காலத்தை நிர்ணயிக்க… அந்த வழியிலே கடந்த வரலாற்றை நினைவுபடுத்த எத்தணிக்கின்றேன்.

கடந்த காலத்தில் பதவிக்குவந்த அரசாங்கங்களின் பார்வையினைத்திருப்பினால், பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 (ஜூலை 26, 1957) … தமிழர்களுக்கு நற்பாதையினைக்காட்ட முனைந்திருந்தபோதும் அது கிழித்தெறியப்பட்ட காகிதமாக முடிவடைந்த கேவலமும் நடந்துதான் இருக்கின்றது. 

அன்று அப்போதைய இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தம் பலருக்குத் தெரியாமலே போய்விட்டது. 

தனிச் சிங்களச் சட்டம், இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான (பொதுவாக வன்முறையற்ற) போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது.

குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிரதேச சபைகளுக்குத் தரப்படும் அதிகாரங்களுள், அப்பிரதேசத்துள் குடியேற்றப்படுபவரை தெரிவு செய்வதும் அங்கு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பும் அடங்கும் என்பதில் இவ்வொப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

ஆனால், இவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஒக்டோபர் 4- 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏன்ற சோகக்கதையும் உள்ளடங்கித்தான் தமிழர்கள் போராட்டம் புறப்பட்டதென்பதனை தற்போதைய தலைவர் புரிந்து தமிழர்களுக்குத் தக்க தரத்தையும் உரிமையினையும் பாதுகாப்பையும் வழங்குவார் என்றும் நம்பித்தான் பார்ப்போமே!!!

வல்லரசுகளின் ஆயுதவிற்பனைக்காகவும் அரசியல் சதுரங்கத்திற்காகவும் பயன்படுத்திய காய்களில் புலிகளும் ஒன்று. அப்புலிகளின் பலம் வல்லரசுகளை அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் அதிகரிப்பதைப் பார்த்து திகிலடைந்தே இப்போருக்கு புலத்தள்ளல் இருந்தது என்றால் அது மறைக்கப்பட்ட உண்மைகளே!

அத்தோடு மன்னார்ப்பகுதியில் மெதுவாய் கசிந்துவருகின்ற பெற்றோலியம் தொடர்பான சில அழுத்தங்களும் இந்தியா சீனா போன்ற நாடுகளை இப்போராட்டத்தின்போக்கை மாற்ற எத்தணித்துள்ளது என்றால் அதுகூட ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது.  அதுமட்டுமல்லாது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடர்ச்சியாகக்காணப்படும் முறுகல் நிலையுடன் பாக்கிஸ்தானின் கெடுபிடிகளும் தீவிரவாதச்செய்கைகளால் இந்தியா சிதறடைவதனையும் கருத்திற்கொண்டு பல இரகசியத் தொடர்புகள் இடம்பெற்றிருந்தமை இலங்கை அரசிற்குச் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளதுஎனலாம்.

இன்றுள்ள நிலையில் இன்னொரு விடயத்தையும் பார்த்தாகவேண்டும். இலங்கையின் முப்படைகளாக, இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை என வகுக்க முடியும். இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்றன. இலங்கை அரசியல்யாப்பின் கீழ் சனாதிபதியே முப்படை தளபதியாக கொள்ளப்படுகிறார். சுதந்திரமடைந்த போது இலங்கையின் பாதுகாப்பு படைகளில் 70 வீதமானோர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருதபோதும் தற்போது அது 2 குறைந்துள்ளது. இதில்கூட தற்போதைய அதிபர் மாற்றத்தை ஏற்படுத்த எத்தணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த வேளையில் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா தொடர்பாக நாம் பேசியேயாகவேண்டும். அவருக்கு அரசஅதிபராகும் ஆசையிருந்தால் அதற்கு இது சந்தர்ப்பமா என்று எண்ணத் தோன்றுகின்றது. அல்லது, நாட்டுக்குச்சேவைசெய்ய விரும்பினால் அதற்கு ஆயிரம் வழிகள் அவருடைய பதவியில் இருந்தே செய்துகொள்ளலாம். அதற்காக இலங்கை அதிபராகத்தான் வந்து சேவை செய்ய வேண்டும் என்பதல்ல, அருகனால் பல அரசியல் ஆலோசனைகளை அப்பட்டமாக வெளியிடமுடியும் என்பதற்காக அருகனே அரசியலில் இறங்க வேண்டும் என்று அருகன் எண்ணுவதென்பது சிரிப்பிற்கிடமாக இருக்கின்றது. அதுபோலவே, சரத் பொன்சேகா வின் போக்கும் காணப்படுகின்றது. மேலும், இத்தேர்தலில் பங்குபெறுவதற்கு அவர் தெரிவு செய்திருக்கும் கூட்டமைப்புத் தொடர்பாகவும் அவருடைய திட்டங்கள் தொடர்பாகவும் அவர் சிறுபான்மை இனத்திற்கு அவர் இன்றுவரை கொடுத்த தரத்தையும் காணும்போது, “அரசனுக்கு ஆசைப்பட்டு புருசனைக்கைவிட்டதாகப்போகப்”போகின்றதென்பதனைத் தெளிவு படுத்துகின்றது. இது தெரியாத எங்கள் தமிழ் கட்சிகள் தில்லுமுள்ளாடுகின்றனர். அரசியலை தனிய அரசியல் வாதிகளால் மட்டும் நடத்திவிட முடியாது என்பதனை இன்னும் எமது தமிழ் அமைப்புக்கள் புரிந்து கொள்ளவில்லை.     

ஒரு தேசத்தில் கொடிய நோய் பரவிஇருக்கும்போது, அத்தேசத்தை எட்டிப்பார்க்காதவர்கள், அத்தேசத்தில் இருந்த கொள்ளைநோய் அகன்றதும், இல்லை சிரமத்தின் மத்தியில் அகற்றியதும், அதற்கு பின்னர் உரிமை கொள்ள பலர் கூடிவருவது போல் இருக்கின்றது இவருடைய செயல். இலங்கையின் தற்போதைய அதிபர் தனக்குக்கிடைத்த காலத்துக்குள்ளேயே தன்னாலான முழு மூச்சுடன் நாட்டை விருத்திசெய்ய வேண்டும் என்று மல்லுக்கட்டும்போது, அதற்கு ஆதரவு கொடுக்கவேண்டியவர்கள் மீண்டும் தேசத்தை பாழாக்க வகைதேடுவதனை காணும்போது, கண்ணீர் பெருக்கெடுக்கின்றது. முப்பது வருடத்திற்கும் பேலாக சாதிக்கமுடியாத சரித்திர மாற்றத்தை சாதூர்யமாக குறுகிய காலத்துக்குள், தன்வசப்படுத்திய சாதனையாளனவன்.

இன்னொருமுறையாகக்கூட சொல்ல வேண்டிய கடப்பாடும் எனக்குண்டு, அதாவது மகிந்த அடித்துக்கொண்ற பாம்பு ஏற்கனவே செத்து விட்டது. செத்தபாம்பைத்தான் தான் அடிக்கின்றேன் என்று அவருக்கும் தெரியும். ஆனால் உலகத்திற்கும் மக்களுக்கும் மண்டையில் உறைக்கும் வண்ணம் தூக்கித்தூக்கி அடித்துக்கொண்றதாகக்காட்டுகின்றார். முதலாவது, கருணாவின் விரிவினால் பாதிசெத்துப்போன புலியின் வீரம் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தால் மீதி செத்துப்போனது. புpன்னர் தமிழ்ச்செல்வனின் இழப்பினால் இன்னுங்கொஞ்சம் செத்துப்போனது, பிறகு நிதி தொடர்பாகவும் உட்பூசல்காரணமாகவும், வெளிநாட்டுத்தொடர்பில் ஏற்பட்ட சிக்கல்தடைகள் காரணமாகவும், சில தலைமைத்துவங்கள் வெளியெறியதற்கும், தலைக்கணம்தலைக்கேறிய காரணத்தாலும் மீதி செத்து … இப்படி பல விடயத்தால் செத்த பாம்பைத்தான் மூச்சுமுட்ட அடித்துக்கொண்றார் எமது அரசதலைவர். இருந்தும் புலிகளின் அழிவு என்பது சாதாரண விடயமல்ல பேச்சுவார்த்தைக்கே ஒத்துவராத புலிகளை மூச்சுவாங்கவைத்துவிட்டார். எது எதுவாகிலும் தமிழர்களின் மரண இழப்பு அறவே தற்போது நின்று விட்டது. இதனைதான் தக்கவிதமாகப்பயன்படுத்த வேண்டும் என்கின்றேன்.    

இதில் கூட்டணியினரைப்பற்றியும் பேசியாகவேண்டும். தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளே தனிநாட்டுக் கோரிக்கைக்காக போராடியவர்கள் போலும், அவர்களே ஏகபிரதிநிதி போன்றும் காணப்படுகின்றன. ஆனால் தனித்தமிழீழக்கோரிக்கை புலிகள் ஆரம்பிப்பதற்கு முன்னமே, தமிழர் கூட்டணியினர் தமிழீழம் என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றினர். அது மக்கள் மத்தியில் தறஇபோது பேசப்படுவதே இல்லை. அத்தீர்மானத்தை அச்சிட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிய அமிர்தலிங்கம் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்த ஏற்பாடாகியது. இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு வழக்காக இது விளங்கியதுடன், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது எனலாம். ஆனால் இன்று பல தமிழழ் கட்சிகள் ஒன்றினைந்து ஒரு இடத்தில் சந்தித்தனர் ஆனால் அதன்முடிவு தமிழர்களாலேயே புரிந்து கொள்ள இயலாது காணப்படுகின்றது… சரி நாம் எமது விடயத்திற்கு வருவோம்…. இவ்வழக்கை நடத்துவதற்காகச் செல்வநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் குழுவில் பொன்னம்பலம் பங்குபற்றி வாதாடினார். இதில் பொன்னம்பலத்தின் வாதத்திறமையினால் கூட்டணித் தலைவர்கள் விடுதலையாயினர். இவ் வழக்கின் மூலம் தமிழர் மத்தியில் பொன்னம்பலத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது எனலாம். இப்போது  உலகளாவிய ரீதியில் தமிழர்களின் போக்கு விஸ்தரிக்கப்பட்ட போதிலும் அரசியல் திட்டங்கள் போதாமையாலும், ஆலோசனைகள் இல்லாததாலும், அனைத்து கட்சிகளும் அனைத்து தலைவர்களும் தம்மையோ சிறப்பானவர்கள் என்று கருதுவதனாலும் தமிழர்களை வைத்து சிங்கள அரசியல்வாதிகள் பந்தாடிக்கொண்டிருக்கின்றார்கள். இப்போது, மக்கள் மத்தியில் இருக்கும் பிரபல்யப்போக்கு இலங்கை அதிபரை தமிழர்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகளிடத்திலும் ஒரு பிரபல்யமான விளம்பரத்தை வழங்கியிருக்கின்றது.  

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கு தற்போதைய அதிபர் எதனைச் செய்யப்போகின்றார் என்பதனை கோருவதனை விடுத்து, முட்டாள்தனமாக அரசியலை நடாத்துகின்றனர் எமது தமிழ் அரசியல்வாதிகள்.

இந்த விடயத்தில் தற்போதைய அமைச்சர் வி.முரளிதரனைப்பாராட்டவேண்டும். பிடித்தபிடி உடும்புப்பிடியாக பிடித்துவிட்டார்… அதாவது, அவரால் தமிழர்களுக்கு எத்தகைய முடிவினை அரசிடம் இருந்து எடுத்துக்கொடுக்கமுடியும் என்பது அவர் மக்களுக்குச்செய்யப்போகும் சேவையினைப்பொறுத்ததும், அரசில் அவருக்கு இருக்கப்போகின்ற அதிகாரத்தையும் பொறுத்தது. இதில் ஒரு முக்கிய விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். தேரிந்தோ தெரியாமலே அவருடைய காட்டில் மழைபெய்கின்றது.அதனைப்பயன்படுத்த தமிழ்க்கட்சிகளோ அல்லது, புலிகளின் ஆதரவாளர்களோ முன்வராது, அவரை ஒதுக்கிவிடவே எத்தணிக்கின்றனர். இதை நான் சொல்வதற்கும் காரணம் உண்டு… இவ்வாறு எழுதுவதால் அவருக்கு யால்றா அடிப்பதாக இவ்வெழுத்துக்களைக் கருதிவிடக்கூடாது, ஒருவரை பிடிக்கவில்லையென்றால் அவர் நல்லது செய்தாலும் அதனைக்கேவலமாகவோ ஒதுக்கியோ, எழுதுவது, எழுத்தாளருக்குப்பொருந்தாது. கருணா அம்மான் என்ற முரளிதரன் தமிழர்களின் விடுதலைக்காகவும், தமிழீழக் கோரிக்கைக்காகவும், புலிகளுக்கு கட்டுப்பாடுள்ள ஒரு நம்பகத்கமான ஒரு நபராகவும் இருந்ததோடு, நடைபெற்ற பேச்சுக்களிலும் தன்னுடைய பங்களிப்பை மேற்கொண்ட விடயத்தை இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன். இன்றுவரை விடுதலைப்புலிகளின் சார்பில் அரசாங்கங்களுடன் பேச்சுக்களை நடாத்தியோரில் உயிருடன் இலங்கையில் இருக்கும் ஒரேஒரு தமிழன் கருணா என்கின்ற அமைச்சரே!

ஐந்தாம் சுற்று பேச்சுக்கள் ஜேர்மனி யில் இடம்பெற்றபொழுது, புலிகளின் சார்பில் பங்கேற்றிய குழுத்தலைமையில் அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன், அடேல் பாலசிங்கம் போன்றோர்கள் பங்குபற்றினார்கள் இதில், அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், போன்றோர் அமரராகிவிட்டார்கள்.  முரளிதரன், முரளிதரனோ அமைச்சராகிவிட்டார்.  அடேல் பாலசிங்கம் கையைவிடவேண்டியதுதான் இலங்கையர் அல்லாதவரிடம் அதிலும் தமிழர் அல்லாதவரிடம் இருக்கும் பொறுப்புக்கள் தமிழர்களிடம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, புலத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு காரணம் யார் என்ற கேள்விகளுக்கு விடைகாண புறப்பட்டால் பல புற்றீசல்கள் வெளிவரும். அது போகட்டும். இந்தப்பேச்சில் அரசுசார்பில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்து கொண்டு தொடர்பேச்சுக்கு வழிவகுத்ததேஒழிய தீர்விற்கு வழிவகுக்கவில்லை.   

இலங்கை அரசு (ஐக்கிய தேசியக் கட்சி) விடுதலைப் புலிகளுக்குமிடையான ஆறாம் சுற்று பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பின்னர் ஜப்பானில் மார்ச் 31இ 2003 – மார்ச் 21இ 2003 நாட்களில் இடம்பெற்ற ஆறாம் சுற்று நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும்.
இலங்கை அரசுக்கும்  (ஐ.தே.க) விடுதலைப் புலிக ளுக்கும் இடையில்  பேச்சுவார்த்தை தாய்லாந்தில் அக்டோபர் 31 – செப்டம்பர் 3 இடம் பெற்றபோது, விடுதலைப்புலிகளின் சார்பில் அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன், அடேல் பாலசிங்கம்  கலந்துகொண்டனர்.

இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் காலம் டிசம்பர் 2 – 5 2002  இதில் புலிகளின் சார்பில் அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன், அடேல் பாலசிங்கம்
இவ்வாறு பல நிகழ்வுகளில் தமிழர்களின் சார்பில் பங்காற்றிய பெரும் பங்கு தற்போதைய அமைச்சர் முரளிதரன் அவர்களுக்கே உண்டு.

இதுமட்டுமல்லாது மேலும் பல பேச்சுக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சந்திரிகா – விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள்இ 1994 – 1995 சமாதானத்தை முன்வைத்து 1994 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிகா குமாரணதுங்க தலைமையிலான இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையான பேச்சுவார்தைகளை குறிக்கின்றது. இப்பேச்சுவார்த்தைகள் பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் 1995 ஜனவரி 3இல் இருதரப்பாலும் ஆரம்பிக்கப்பட்டாலும் குறுகிய காலப்பகுதியில் இறுக்க நிலையை அடைந்தது. தமிழ் மக்களின் உடனடி அடிப்படைப்பிரச்சினைகளை அரசாங்கம் கவனிக்க மறுக்கின்றது எனக் காரணம் காட்டி விடுதலைப் புலிகள் ஏப்ரல் 19இ 1995ம் ஆண்டு முன்னறிவித்தலுடன் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக்கொண்டனர்.

விடுதலைப் புலிகள் இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தம்இ 2002 நோர்வே நாட்டின் அனுசரையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே பெப்ரவரிஇ 2002 காலப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை குறிக்கும். புலிகள் தலைவர் வே. பிரபாகரனும் அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் இந்த ஓப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள்இ இரண்டாம் சுற்று எனப்படுவது இலங்கை அரசுக்கும் (இலங்கை சுதந்திரக் கட்சி) விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அக்டோபர் 28-29இ 2006 திகதிகளில் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் நேரடி பேச்சுவார்த்தைகளைக் குறிக்கும். வட கிழக்கு இலங்கைத் தமிழ் மக்கள் மிகவும் இக்கட்டான ஒரு வாழ்வியல் சூழலில் இருக்கையில் இப்பேச்சுக்கள்  நடந்தேறின.

இவ்வாறு பார்க்கும்போது, தமிழர்களின் விடிவிற்கான முடிவு எந்தப்பேச்சுக்களிலும் வந்தேறவில்லை. தலைமையின் அணுகுமுறையில் தவறுகள் இடம்பெற்றால் அதனைச்சுட்டிக்காட்டவேண்டியவை துணைத்தலைவர்களுக்கு உரித்துண்டு. அவ்வேளையில் மக்கள் உயிர்நலம், எதிர்காலம் போன்றவற்றை எண்ணிப்பார்க்கும்போது, கருணா என்கின்ற தற்போதைய அமைச்சர் பாராட்டக்கூடியவரே. அவரின் பிரிவு கிழக்கில் ஏற்படவிருந்த பல பேரழிவுகளை காத்து புலிகளின் பலத்தைக்குறைத்ததும் புலிகளின் இழப்பிற்குக்காரணமே. இதிலும் புலிகளின் தந்திரத்தில் ஒரு பகுதியோ என்றுகூட எண்ணத்தோன்றுகின்றது. அதுபோலவே பிள்ளையானுக்கும் கருணாவிற்கும் இடையில் இருக்கும் சிக்கலைக்கூட அரசியலாகக்கருதமுடிவதாகவே காணப்படுகின்றது. சிலரை நம்பவைப்பதற்கு சில நம்பிக்கையானவர்கள் இடையில் நம்பாது இருப்பதே சாலச்சிறந்தது. இது என்னொரு ஆக்கத்தில் விவாதிக்க அல்லது விபரிக்கப்பட வேண்டியவை…  

1946ல் அரசியல் யாப்பு நிறுவப்பட்டது, 1948ல் பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் கிடைத்தது, இது வரலாறுகளானது… ஆனால் இன்று ஒரு தலைமுறைக்குள்ளே பல வரலாறுகளை எமது சமுதாயம் கண்டுகொண்டுள்ளமை வியக்கத்தக்கசெயலாகும்.

ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தமிழினத்தின் ஆதிக்க வெறியுடைய அரச மிருகமாக இருந்தது, அரசியல் யாப்பும், தேர்தல் முறையும் என்றால் அது புரிந்து கொள்ள அரசியல் வாதிகளாலேயே இயலாமல் இருக்கின்றது என்றால் அது மிக வெளிச்சம்.

தானே குழியினைத்தோண்டிவிட்டு தற்போது, தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கின்றது தற்போதைய எதிர்க்கட்சியான சொத்தைப்பாம்புகள். தும்மாவல் உருவாக்கிய யாப்பே தமக்கு ஆப்பாக போனதால் அதை மற்றவேண்டும் என்று கங்கணம் கட்டுகின்றனர் ஆனால் அவர்கள் ஆட்சியமர்ந்தாலும் அது மாற்றப்படப்போவதில்லை.  1978ன் அரசியல் யாப்பின் பிரகாரம் முழு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை உருவாக்கப்பட்டது. அப்போதைய காலந்தொட்டே தமிழர்கள் அதிவேகமாக நசுக்கப்பட்டு வந்தார்கள் என்பதனை தமிழர்களே மறந்து, தற்போது கனவுலகத்தில் சஞ்சரிக்கின்றனர். இருந்தும் புலிகளின் வளர்ச்சிக்கு அதிக பங்களித்தவர்களும் இவர்களேயென்றால் அது மிகையில்லை. அதாவது, ஒரு தனிமனிதனின்  ஆதங்கத்தை நிவர்த்தி செய்யாதபோது அவ்வாறான ஆதங்கங்கள் கூட்டமைப்பாகின்றன … அப்போதும் அது நிறைவேறாத விடத்து அது போராட்டங்களாகின்றன… எனவே முதல்முறையிலேயே தீர்வுகள் முன்வைக்காதவிடத்து முடிவில் பாரிய இழப்பைச்சந்திக்கநேரிடும் என்பதும் வரலாறே…!!!

தமிழர்களின் சாபக்கேடு… சாபக்கேடு…  என்றே காலத்தைக்கடத்தவேண்டாம். இது சாபக்கேடல்ல சதிக்கேடு, தமிழர்களின் முட்டாள்தனத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் கிடைத்த சதிக்கேடு. இலங்கை அரசியல்யாப்பின் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளிலும், அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்த தமிழ் அரசியல்வாதிகள் இணைந்து செயற்படவேண்டும். கூட்டமைப்பின் இணைவு என்பது தமிழர்களின் விடிவுக்காகவல்ல அவர்களின் அரசியல் தந்திரத்திற்காக… விடிவு ஒரே முடிவில் கிடைக்கவேண்டும் 13ம் திருத்தத்தை மட்டும் பேசுவது பொருத்தமற்றது, தமிழர்களுக்கு தனியரசு அமையாவிட்டால், தமிழர்களுக்கொரு தேசமாக சிங்களவர்களுக்கொருதேசமாக இவையிரண்டையும் ஆளக்கூடிய மத்திய அரசுஅமையும்வகையில் சமஷ்டி முறையில் தீர்வு அமைய வேண்டும் என்பதே ஒnருமுடிவு என திடமாக அறிவிக்கவேண்டும். ஒரே முடிவு யாப்பில் மாற்றத்தை தமிழர்களுக்கு ஆதரவாக அமையும்வகையில் அமைத்தே ஆகவேண்டும் என்பதில் அனைத்துத்தமிழர்களும் திடமாக இருக்கவேண்டும். சாதாரன விடயத்தில் ஒத்துப்போகாத தமிழ்க்குழுக்கள் எப்படி மீதிவிடயங்களில் ஒத்துப்போவார்கள்???

தமிழர்களின் நிலையை பயன்படுத்தி தம்மைத்திடப்படுத்துவோர்களில் தமிழர்களே அதிகம் பயன்படுத்துபகின்றார்கள். புலிகளுக்கு எதிர்ப்பைக்காட்டுவதாக கூறிக்கொண்டு, தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளுக்குப்போராடுவதில் தமிழ் அரசியல்வாதிகள் பின்நிற்கின்றார்கள் என்பது உண்மையே!!! இலங்கை அரசியல் மூலம் தமிழர்களும் இலங்கை அதிபராகலாம் என்ற முறையில் தேர்தல்நிலைமாற்றப்படவேண்டும். இதற்கு தமிழர்கள் மத்தியில் சர்வதேச ரீதியில் ஒரு மாபெரும் தீர்மானம் எடுக்கும்வகையில் இலங்கைத்தமிழ் அரசியல்வாதிகளால் பல்வேறு கருத்தரங்கிற்கு முன்வரவேண்டும். இதில் கட்சிவேற்றுமையின்றி அனைத்து அமைப்புக்களும் பங்குபெறும் வகையில் அமையவேண்டும். இதன்மூலம் ஒருங்கிணைந்த தமிழ் சமுகம் மீண்டும் கட்டியெழுப்பப்படவேண்டும். அது ஆயுதப் போராட்டத்திற்கல்ல அரசியல்திட்டத்திற்கு…!!!

தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலுள்ள பலத்த வேறுபாடுகள் உள்ளதை ஏற்கனவே பல நாவல்களில் வெளியிட்டுள்ளேன். இலங்கையில் நடைபெற்ற எமது தமிழ்மக்களின் போராட்டத்தின் அடிப்படை தீவிரவாதம் என்பது உண்மையே. அது பயங்கரவாதமல்ல!!! தீவிரவாதத்திற்கு போர்முடிவல்ல என்பதனை இலங்கை வைராக்கியம் கொண்ட அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். தீவிரவாதம் தீர்த்துவைப்பதன் மூலமே முடிவிற்குக் கொண்டுவர வேண்டியவையேயொழிய, அழிப்பில் முடிவிற்குக்கொண்டுவரமுடியாது. புல அரச தலைவர்களையும் ஆயுத பலமிக்க அணுகுமுறையுமே புலிகளை பயங்கரவாதபட்டியலில் கொண்டு சேர்த்தது.

மேலும் ஏற்கனவே எழுதியதுபோல் இலங்கையில் இராணுவ ஆட்சி நிலவக்கூடிய சாத்தியக்கூறு இருந்தாலும், சர்வாதிகாரப்போக்குடைய  அதிகாரமுடைய ஆட்சியிருப்பதால், கொஞ்சம் ஸ்தம்பிக்கக்கூயதாக இருந்தது. ஏன்பதனை 2006ல் விபரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது, தமிழர்களுடைய பங்களிப்பென்பது, முப்படைகளிலும் சொத்தைகளாக இருந்தாலும், பணத்திற்காகப் பங்களிப்புச் செய்தேரை கடந்தகாலத்தில் அரசு தண்டித்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு பெரும் குழப்பம் இலங்கையில் நிகழ்ந்து அதில் ஒருதெளிவுவரவேண்டும். அதற்காகக்கிடைக்கும் சந்தர்ப்பத்தை நாம்தான் கண்டெடுக்கவேண்டும். தற்போது நடைபெறுகின்ற பல சந்தர்ப்பங்கள் தமிழர்களுக்குச்சாதகமாக இருந்தாலும் அதனை பக்குவமாகப்பயன்படுத்த ஆற்றலுடையோரைக் கொண்டிராத காரணத்தால் தமிழர்களின் முன்னேற்பாடுகளும் தேவையற்றுச் சறுக்கிக்கிடக்கின்றது என்பது அப்பட்டமான உண்மையே!!!

இதில் சிரிப்பிற்கிடமென்னவென்றால், பலமிக்க யானை பறக்க நினைத்து “ ஜீகும்பா” செய்து  பட்சியாகியதே!!!. படாத பாடுபட்டடு எதிர்கட்சித்தலைவர் தேடிப்பிடித்த தேர் சக்கரம் இல்லாது நகரமறுக்கின்றது. பொறுத்த இடத்தில் அவர்களில் பலர் குத்துக்கரணம் அடிக்கப்போகின்றனர்.  அது பற்றி இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

சிறீலங்கா அரசில் தமிழர்களின் அரசியல் பலம் அதிகரிக்கவேண்டும். இன்று அரச கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு போதியளவு விஸ்தரிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது, பலர் பின்தங்கிய நிலையில் இருந்து, சுயதொழில் அபிவிருத்திமூலமும் அரசின் உதவித்தொகை மூலமும் முன்னேறிவருகின்றார். கடந்த காலத்தில் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி அபரவிதமான முன்னேற்ற செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது. இன்னும் சில மாதங்களுக்குள் இலங்கையின் மிகச்சிறந்த சுற்றுலா பயணிகளின் வருமானத்தைக்கொடுக்கின்ற பகுதிகளாக அப்பகுதிகள் அமைந்து, அரசிற்கு ஏராளம் வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கப்போகின்றது. இதன் மூலம் மக்களும் தொழில்வாய்ப்புக்களையும் முன்னேற்றத்தையும் அடைவதோடு முன்பு நடந்த துன்பவியல் சம்பவங்களில் இருந்து மீண்டு, மீண்டும் பழைய உரிமையுடைய சுதந்திரவாழ்க்கைக்குத்திரும்பப்போகின்றார்கள்.

தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)  அவர்களின் முன்னேற்பாடான பாரிய திட்டங்கள் சந்தர்ப்பங்களும் சாத்தியங்களும் கைகொடுக்கும்போது, முப்பது வருட அழிவுகளையும் மூன்றுவருடத்தில் மீழக்கட்டியெழுப்பிவிடலாம். இன்று கிழக்கு மாகானத்தின் பல்வேறு கீழ்மட்டத்தில் உள்ளவர்களை தரம் உயர்த்துவதற்கான ஏராளமான முன்னேற்ற பாதைகளை அம்மான் எடுத்துவைத்துள்ளார். கடந்த காலங்களில் அவர் தலைமையில் கிழக்கில் நடந்த நிகழ்வுகள் அவற்றை உறுதிப்படுத்துகின்றன. சில இணையங்களும், பல தொடர்புச்சாதனங்களும் அவற்றை வெளியிடாது, புலத்தில் இருப்பவர்களுக்கு அத்தகவல்களை கொண்டுசெல்வதில் பின்னடைவுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, அம்மானுடைய நிலை உயரவிடாது, தவறான வதந்திகளையும் வெளிக்காட்டி வருகின்றனர். இவர்கள் தமது சாதாரண நிலைக்குவரவேண்டும். தமிழர்களின் விடுதலையும், சுயநிர்ணய உரிமையினையும், அவர்களுக்குக்கிடைக்கவேண்டிய சகலவிதமான முன்னேற்ற பாதையில் கொண்டு சேர்க்க ஒருமித்த “தமிழ்த் தேசியத்தைக்” கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.

எனவே இன்னும் சிறிதுகாலத்தில் அவ்விணைந்த தமிழ்த்தேசியம் கட்டுப்பட்டுவிடும். அதன்பின்னர், தவறான பாதையில் செல்பவர்கள் மக்கள்மத்தியில் இருந்து தானாகவே ஒதுக்கப்பட்டுவிடுவார்கள். அவர்கள் தாமும் தம்முடைய பாதைகளைத்திருத்தாது, மக்களையும் நிம்மதியாக அகத்திலும் புலத்தில்கூட வாழவிடாது தவறான பாதைகளைக் காட்டிக்கொடுக்கின்றனர்.

எனவே, ஒருங்கிணைந்த சர்வதேசத்தமிழ்த்தேசியத்தைக்கட்டியெழுப்ப ஒன்றுபடுமாறு உங்கள் இவ்வாக்கத்தின் மூலம் அறைகூவல் விடுகின்றேன்.

இன்று தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன்  அவர்கள் இன்றுள்ள நிலை மேலும் இலங்கை அரசில் முன்நிலையில் அமைந்த இலங்கையின் பலம்பொருந்திய அதிகாரம் அவரிடத்தில் கைசேர, அனைத்துத்தமிழர்களும் வடக்குக்கிழக்கு என்ற வேறுபாடில்லாது, கட்சிபாகுபாடின்றி, இன மொழி மத பிரிவுகளை விடுத்து ஒருமித்த சமூகமாக புதிய அரசைக்கட்டியெழுப்ப அவருக்குக்கைகொடுப்போம்.

தமிழர்களுக்கொரு இளைய தலைவர் தேவையாக இருக்கின்றது. அது, அனுபவமும், அரசியலும், ஆதரவும், பலமும், இருப்பதோடு குறிப்பாக மக்கள்நலன் மட்டுமே முன்நிறுத்தக்கூடிய மனிதனாக இருக்கவேண்டும். அது அம்மானுக்கு நிறையவே இருக்கிறது என்பதனை அவர் உறுதிப்படுத்தி காட்டவேண்டும். மென்மேலும் அவரின் பாதைகள் செம்மைப்பட தமிழர்கள் மேலும் அவருக்குப் பக்கதுணையாக இருக்கவேண்டும்.

அவரின் அடிகளே தண்டனைக்குரியவர்களாகக் கருதப்பட்டவர்களுக்கும் பொதுமன்னிப்பு என்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டு மீண்டும் சமுதாயத்தில் அடியெடுக்க அவரின் பங்களிப்பு மிக அதிகமாகக்காணப்படுகின்றது… 

“இலங்கை அதிபரின் அரசியல்த் திட்டம், தமிழர்களை பிரித்து இலங்கையை ஆட்சி செய்வதே. அதாவது, கிழக்கு மாகானத்தை அதிகாரமற்ற முதலமைச்சர் பிள்ளையான் கையில் ஒருபுறமும், வடக்கை அமைச்சர் டக்ளசிடம் மறுபுறமும், கருணாவை மத்தியில் தனக்கருகே, தீவிரவாதத்தில் இருந்தவருக்கும் தலைமைப் பதவி கொடுத்துவைத்து, மறுவாழ்வு அளித்துக் கௌரவிக்கின்றேன் என்று மறுபுறமும், கூட்டணியினரை தமிழ் மக்களின் பெரும் பிரதிநிதி என்று அவர்களிடம் பேச்சுக்களை நடாத்தி நடுப்பகுதியிலும் இன்னொரு புறம், என்று பிரித்தாள முயற்சிக்கின்றார். இதற்கிடையில் இருக்கும் சிறிய தமிழ்க்கட்சிகளையும் அவ்வப்போது கண்காணித்து அவர்களையும் உசுப்பேத்துகின்றார். தமிழர்கள் பலம் அதிகரித்தால் அவர்கள் நாளை இலங்கையை ஆழக்கூடிய வாய்ப்புண்டென்று அவர் நன்கு அறிவார், இல்லை மிகப்பெரிய எதிர்க்கட்சியாகும் வாய்ப்புண்டு என்பதும் அவர் திண்ணம். இதற்கு இரண்டு வழிகளில் உற்றுநோக்கலாம். அதாவது, இன்று தமிழ் முஸ்லீம் மக்கள் மலையக மக்கள் போன்றோர் இணைந்தால், பலமுள்ள சிங்கள அரசியல் கட்சிகள் போல் பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான அங்கத்தவரைக்கொண்டிருக்கும். மற்றையது, சிங்கள கட்சிகள் பிரிந்து செயற்படுவது தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் இன்னொருபலமாகக்காணப்படுவது. 

இலங்கை அரசில் தமிழர்களின் பலம் ஓங்கவேண்டும். இதன்மூலம் மட்டுமே தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும். கிழக்குமாகான முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பு மேலுமுள்ள தமிழ்க்கட்சிகள் முஸ்லீம் கட்சிகள் மலையகக்கட்சிகள் இணைந்து செயற்படவேண்டும். “உலகத் தமிழ்த் தேசிய கட்சியாக” அக்கட்சி செயற்படவேண்டும். இதன்மூலம் தமிழர்களின் அரசியல் தந்திரம், இலங்கை அரசில் கால்பதிக்கவேண்டும். அதன்மூலம் மட்டுமே தமிழர்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்காக இலங்கை அடிப்படை-யாப்பில்- கைவைக்கமுடியும் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும்.”

இவ்வாறு பலவருடங்களாக எனது அடிப்படை ஆக்கங்களில் எழுதிவருவது வாசகர்களான உங்களுக்குத்தெரியும். இதனை தற்போது தமிழர் கூட்டமைப்பு நன்கு புரிந்து செயற்பட ஆரம்பித்துள்ளது. அதாவது, ஆரம்பத்தில் “மலருமா தமிழீழம்” என்ற நாலலூடாக தமிழர்களுக்கான பல வழிகளை எடுத்துரைத்ததினை புலத்திலிருந்து இயங்கும் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் கையாண்டமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அடுத்தகட்டமாக கூட்டமைப்பிற்கும், நாடுடந்த தமிழீழம் அமைக்கும் செயற்பாட்டிற்கும் வித்திட்ட வழிமுறைகளை ஆணித்தனமாகத்தெரிவித்த அந்த நூலில் தமிழர்களின் பலம் தொடர்பாகவும் பலவீனம் தொடர்பாகவும் திடமாக எழுதப்பட்டிருந்தது. இப்போது கூட்டமைப்பினர் முஸ்லீம் கட்சிகளை வால்பிடிப்பதில் இருந்து அத்திட்டத்தையும் கையான முனைகின்றனர். கையாள முனைவது தொடர்பாக பெரிதாகப்பேச வரவில்லை. அவர்கள் அதனைச்செய்யவேண்டும் என்பதற்காகவே பலதடவைகள் இணையத்தின் மூலமாகவும் வெளியிட்டேன். ஆனால் முஸ்லீம் கட்சிகள் இப்படியொரு வினாவை கேட்டால் கூட்டணியினரின் பதில் என்ன? அதாவது, எம்மை இணையும்கடி கேட்கின்றீர்கள், முதலில் தமிழர்களான உங்களிடம் இருக்கும் பிளவினை மறந்து இணையாத  நீங்கள், ஒற்றுமையாக நிம்மதியாக அரசில் அங்கம்வகிக்கும் எங்களுடன்  எப்படி தொடர்ந் செயற்படுவீர்கள் என்று நம்புவது?

இதற்கு கூட்டமைப்பினர் மூக்குடைந்து நிலத்தில் விழுந்து செல்வார்கள். சாக்குப்போக்காகப்பதில் சொன்னாலும் இது உண்மையான வினாவே. தமிழர்களின் போராட்டத்தில், தாம் போராட்டம் இல்லாமலே தம்முடைய இனத்திற்கு விடிவினை ஏற்படுத்துகின்றவர்கள் முஸ்லீம் மக்களே! என்றும் பலதடவைகள் எழுதியுள்ளேன்.  

 
விரைவில் முஸலீம் மக்களிடம் கிழக்குமாகானம் பறிபோகும்… தமிழர்களின் போராட்டம் முஸ்லீம் மக்களுக்கு நிரந்தர தாய்நிலத்தை கொடுத்தது என்றால் அது மிகையில்லை. தமிழர்கள் தந்தை செல்வா சொன்னதுபோல் யாராலும் காக்கமுடியாத இனம்… காரணம் தமிழர்களுக்குப்பிரச்சனை, சிங்கள அதிகாரிகளோ அல்லது இலங்கைச்சட்டமோ அல்லது வெளிநாடுகளோ அல்ல … அவர்களுடைய சிக்கல் அவர்களே!!! துலைக்கணமும் ஒற்றுமையின்மையுமே. ஆதனை இம்முறை நடக்கும் தேர்தல்மூலம் உடைத்தெறிந்து ஒற்றுமையினைக்காட்டவேண்டும்.

அரசில் அங்கம்வகித்தால் மட்டும் அரசியல்வாதிகளாகிவிடலாமா? புலிகள் ஆயதத்தால் போராடிய முறையினை தற்போது, கூட்டணியினர் அரசியலால் போராட முனைகின்றனரேயொழிய,  தமிழர்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் விடுதலைக்காகவும், மற்றும் இலங்கை அரசிடம் இருந்து தமிழர்களுக்குக்கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காகவும் இயங்கவில்லை என்பது திண்ணம். ஏதோ இப்போதுதான் புதிய இனமாக தமிழர்கள் தோன்றியது போலும், தமிழ்க்கட்சிகள் இப்போதுதான் ஆரம்பித்தவை போன்றும் செயற்படுகின்றன…

இன்னொரு முக்கிய விடயத்திற்காகவே இவ்வாக்கம் எழுதப்படுகின்றது. அதாவது, முன்பே எனது ஆக்கங்களில் எழுதிய விடயமேஇது… தமிழ் உலகத்தின் பலபாகங்களில் இருக்கின்றது… பல அரசினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது… சிலநாடுகளில் அரச மொழியாகவும் காணப்படுகின்றது… ஆனால்; தமிழர்களின் சார்பில் உலகரீதியிலும், நாடுகள்ரீதியிலும் பேசப்படும்போது, ஏன தமிழ் மொழி பேசப்படுவதில்லை? ஐ.நா. சபையில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை?… 

தமிழ் வெறும் பேச்சுமொழியாக இருக்கும்மட்டும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை… அது எப்போது ஒரு இனத்தின் மொழியாக அமைகின்றதோ அப்போது, அதற்குத் தனி இடம் கிடைத்தே ஆகும்.  நடிகர் கமலகாசன் சிறந்த நடிகராக இருந்தும் அவருக்கு ஆஸ்கார்விருது கிடைக்கவில்லை, இளையராஜ சிறந்த இசையமைப்பாளராக இருந்தும் அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை… ஆனால் ரகுமான் அவர்களுக்கு விருது கிடைத்ததென்றால் அவர் வேற்றுமொழியில் தன்னைப்பிரபல்யப் படடுத்தியதே! எப்போது தமிழ் பிறநாட்டுமக்களிடத்திலும் புகுத்தப்படுகின்றதோ அப்போது, அது அதிகமாக கண்காணிக்கப்படுகின்ற இனமாகக்காணப்படும். திருக்குறள் தமிழில் கற்றோரிடத்தில் மட்டுமே தங்கிநிற்கின்றது, ஆனால் அது பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் அதன்மூலம் தமிழர்கள் வெளியில் வரவில்லை. காரணம் தமிழர்களுக்கு பிறநாட்டவர் கொடுக்கின்ற மதிப்பும் மரியாதையினையும் தமிழர்கள் கொடுப்பதில்லை. பிறநாட்டு மொழியில் இருப்பதனை தமிழில் மொழிபெயர்த்து பேர்வாங்க முன்வரும் அளவிற்கு, தமிழர்களின் படைப்பைப்பேசிப் பேர்வாங்க முன்வருவதில்லை…  இன்றில் இருந்து புதிய சிந்தையில் எம்மை நாம் வழிநடத்த ஒரு பொறி இந்தத்தேர்தல்… இதனைத் தக்கவிதமாகப்பயன்படுத்துவோம்…

6மாதத்தின் பின்னர் கண்திறந்த GTV

 

வணக்கம் தமிழ் உறவுகளே!!! மற்றும்  GTV  அமைப்பாளர்களே!!!

Subject: உலகின் அரசியல் விளையாட்டிலும்,

 millai_10509_29 உலகின் அரசியல் விளையாட்டிலும், அதிகாரத் தற்பெருமையிலும் வீணாகிக்கொண்டிருக்கும் எம்முயிர்களோ ஆயிரமாயிரம்.
சிறுவர்களின் பாதுகாப்புக்கென்று உலகெல்லாம் அமைப்புண்டு, எம் தமிழ் சிறார்களின் உடல்களோ அமைப்பின்றி சிதைவடைந்து கிடக்கிறது.

உலகில்; போர் தேசமுண்டு…, பட்டினிச்சாவுண்டு…, கொலை கொள்ளை கற்பழிப்புண்டு…, போராட்டமுண்டு…, தற்கொலையுண்டு…,  தற்கொடையுண்டு…, அடக்குமறையுண்டு…, வியாதியுண்டு…, விரக்தியுண்டு…, சூழ்ச்சியுண்டு…, சதியுமுண்டு…, அடிமைத்தனமுண்டு…, இடப்பெயர்வுண்டு…, இயற்கை அழிவுண்டு…, … … …. …. !!! !!! !!!

ஆனால் இத்தனையும் ஒருங்கே அனுபவிக்கும் ஒரு தேசம் உண்டென்றால், அது ஈழம். அதில், தமிழர்கள் மட்டுமே என்றால் அது மிகையில்லை.

“சாவில் கூட சாந்தியில்லாத நம்தேசம்” என்ற பெருமை எமக்கு. சேற்றிலும், சடலத்திலுமே தூங்கிக் கொள்ளும் சாபக்கேடு எமக்கு. வெட்டவெளியில் சத்திரச்சிகிச்சை, தனையன்மடியில் தாயின் பிரசவம், சிதைவுண்ட உடலோடும் வடிந்தோடும் குரதியோடும் போராடும் எம்மினம். குடிப்பதற்குத் தண்ணீருமில்லை சொல்லியழக் கண்ணீருமில்லை. மலசலகூடத்தில் மானடிதொழுகை எம்தேசத்தில்,…

யாரிட்ட சாபமோ இன்னும் போததாதென்று கேட்கும் எம்மினத்தின் உயிர்களின் சேதம். இரவில்கூட அழுகுரலின் ஓலங்கள்… இன்னும் எத்தனை காலம் கேட்கப்போகிறதோ???-அருகன் –

இப்படி ஒருமுறை எழுதி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு (Tuesday, March 10, 2009 5:20 PM) ஆக்கத்தினையும் நடந்த சம்பவங்களையும் அனுப்பியிருந்தேன்….

இன்று (29-08-2009)  ஜீரீவி யை பார்த்தேன். அதில், ஜீ.ரீ.வி.யை இலவசமாக அனைவரும் பார்க்கக்கூடியவகையில் செய்வதற்காக மக்களிடம் இருந்து நிதிகளைக்கோருவதற்கான நிகழ்வொன்று இடம்பெற்றது. அதனைப்பார்த்ததும் எனக்கு சிரிப்புடன், கவலையும், ஏழனமும் ஒருங்கே வந்தது. காரணம் கடந்த 19ம்திகதி மாசிமாதம் 2009ல் அவர்களுக்கு என்னால் எழுதப்பட்ட மின்னஞ்சலை இங்கே தருகின்றேன். அதற்கு அவர்கள் எனக்கு அழித்த பதிலையும் இணைக்கின்றேன்.

(From: Arugan

Sent: Thursday, February 19, 2009 11:33 AM

To: subs@gtv-network.com;editor@gtv-network.com;

Subject: To GTV From Italy

வணக்கம் மதிப்பிற்குரியவர்களே!

€தாயகத்தின் அவலங்களை அவ்வப்போது வெளியிடும் தங்களுக்குத் தலைவணங்குகின்றேன். விடுதலை நோக்கிய கடினமான பாதையில் ஊடகச்சாதனங்களின் அவசியம் பற்றி அறிந்ததால் இதனைத் தொடர நேர்கிறது. இன்றுள்ள சூழ்நிலையில் தங்கள் சேவை கட்டணத்தின் நிமித்தம் மக்களிடம் சென்றடைவதில் பின்தங்கக்கூடாது. எனவே இதனை சர்வதேச மயமாக்கும் நோக்கில் நிதி தொடர்பாக மாற்றுவழியினைப் பயன்படுத்த வெளிஉலகின் சர்வதேச சட்டதிட்டத்திற்கேற்ப சுதந்திரத்தோடே காத்திரமான முறையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்பதனை நாங்கள் நம்புகின்றோம்.

இதுதொடர்பாக தங்களின் காலம்தாழ்த்தாதா தொடர்பினை எதிர்பார்க்கின்றோம்.

“ஞாலங்கருதினுங் கைகூடும் காலங்கருதி இடத்தாற் செயின்” என்பதனை மிக உறுதியாக நாங்கள் நம்புகின்றோம்.

அன்பன் அருகன்)

அதற்கு அவர்கள் எனக்கு அழித்த பதிலையும் இணைக்கின்றேன்…

From: GTV Subscriptions

Sent: Wednesday, March 11, 2009 11:17 AM

To: Arugan Maximin

Subject: Re: உலகின் அரசியல் விளையாட்டிலும்,

Dear Mr Arugan,
Thanks very much for your note. Much appreciated.
We need all the help. More importantly, your subscriptions to keep our service going. We want to do more.
Please contact us atleast via email and join. Please write to us on;
subs@gtv-network.com or alternatively please email us your contact number and we will call you.

Could you please email us the following details. such as,

Country-

Full name-

Address-

Tel no-

You can pay us by credit card. We will be encrypting the Channel in a week or so.
Please get your family and friends to subscribe. We need all of you urgently.
Kind regards
Management ——

முன்னோக்குச் சிந்தையோடு வணங்காமண் செயற்பாட்டின்போது என்னால் வழங்கப்பட்ட ஆலோசனையினை உதார்சீனப்படுத்தினீர்கள். ஆனால் நாளடைவில் வணங்காமண் இலங்கையை வணங்கியதற்குக் காரணம் முன்பு நான் கூறிய அதே நடவடிக்கைகளை தமிழ்நாட்டு அரசு கைக்கொண்டதே என்பதும் குறிப்பிடத்தக்கது. எமது வரட்டுப்பிடிவாதத்தால் மேலும் மேலும் தமிழர்களை பின்னோக்கிச் செல்லாமல் நாமும் சில சூழ்ச்சிகளை அரசியலில் செய்தாகவேண்டும் என்பதனை அரசியல் அறிவுடன் சொல்லுகின்றேன். இனியாவது அறிவுடையோரை இணைத்து செயற்படுங்கள்.

அன்று நான் எழுதிய அல்லது வழங்கிய அறிவுரையினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் 6மாதங்கழித்து தாமாக தொடங்குவதுபோல் தொடங்குகின்றனர். இதில் மக்கள் ஒற்றுமையாம்… முன்னோக்குச் சிந்தையுடையோரை, அறிவுடையோரை மதிக்கத்தெரியவேண்டும் அறிவுடையோரின் ஆலோசனைகளை முதலில் அவர்களுடன் இணைந்து பரிசீலிக்கவேண்டும். இதில் தன்மானம் எதற்கு…

முதலில் நாடுகடந்த தமிழீழம் தொடர்பாக முன்னோக்குச் சிந்தையோடு என்னால் எழுதப்பட்ட "மலருமா தமிழீழம்" என்ற நாவலில் குறிப்பிட்டதை இரண்டுவருடத்தின் பின்னர் அமைப்பாளர்கள் செயற்படுத்தத்தெடங்கினர்… எது எப்படி இருந்தாலும் மக்கள் நலமடைந்தால் போதும்.

மக்களை வருத்தாமல் தமிழர்களுக்கு நலம்மிக்க செயற்பாடைசெய்ய பலதிட்டங்களை வழங்கினாலும், தாம்போடும் திட்டத்திற்குத் தலையாட்டும் மக்களைமட்டும் நம்பும் அளவிற்கு அறிவுடையோரை நம்பத்தயாரில்லை… மேலும் மேலும் தங்கள் செயற்பாடுகள் வளர மனம்நிறைந்த வாழ்த்துக்கள். என்றும் தமிழர்கள் நலம் வேண்டி செயற்படும் அன்பன் அருகன்.

கே.பி புலிகள் ஆதரவாளர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டாரா???

 

கே.பி புலிகள் ஆதரவாளர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டாரா???

 

தமிழ் மக்களின் பணதில் தனது வாழ்க்கையினைச் செலுத்தியோர் எத்தனையோ பேர் திகைப்பில் இன்று காணப்படுகின்றனர். அத்தோடு புலிகளின் பெயரைச் சொல்லித்தம்மைத் திடப்படுத்தியவர்கள் இனி தமது நடை உடை பாவனைகளை மாற்றியாகவேண்டும். மக்களின் எதிர்பார்ப்பு என்பது வேறு, மக்களின் உரிமை என்பது வேறு, மக்களுக்காய் தம்மை அர்ப்பணித்து தமது உயிரை இழந்த ஆயிரக்கணக்கானோரை பலிகொடுத்த செயல் சுயநலப்போக்குடையதாக மாற்றமடைந்துள்ளது. கே.பி. யின் செயலால் மேலும் தமிழர்களின் மிஞ்சியிருந்த நம்பிக்கையும் போய்விட்டது என்றால் அது மிகையில்லை.

கேபி பிடிபடக்காரணம் அவருடைய கவனக்குறைச்சலா அல்லது இலங்கை புலநாய்வுத்துறையின் முயற்சியா அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் கேபியை தலைவராக்கவிரும்பாதவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டாரா? இதற்கான பதில் அடுத்து வெளிவரவிருக்கிறது தொடர்ந்தும் எமது இணையத்தைப்பாருங்கள்.

பிரபாபின் இறுதிக்கட்ட அறிக்கைகள் எங்கே??? பிபாவின் மரணத்தில் சதி இடம்பெஙற்றமைக்குக் காரணம் கேபியா??? 81ம் ஆண்டுக்குமுன்னர் பிரபாவுடன் மிகநெருக்கமாக இருந்தவர்களில் கருணாவும் கேபியுமாவார்கள் அன்றாடம் இறப்பினைக்கண்டு கொண்டமக்கள் இப்போது நிம்மதியான ஒளியினை எதிர்பார்க்கின்றார்கள் என்றால் அது கருணா என்ற தனிமனிதனால்தான்.

இத்தாலியில் புலிகளுக்கு ஆதரவானவர்களைப் புலநாய்வுத்துறையினர் கைதுசெய்தபோது, தமிழ் தேசவிடுதலைக்காக நமது பங்களிப்பு என்ற ரீதியில் பிடிபட்டவர்கள் தமது தலைமைத்துவங்களைக் காட்டிக்கொடுப்பில் அவர்கள் ஈடுபடவில்லை.

ஆனால் தலைமைக்கு ஆசைப்படுவோர் தமது மக்களை ஆதரவற்றுக் கைவிட்டநிலையில்,  காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டடிருப்பது தமிழினத்தின் கேவலத்தைக்காட்டுகின்றது. இலங்கை அரசிற்கு ஒரு அறிவித்தலை விட விரும்புகின்றேன். தமிழர்களின் அபிவிருத்திக்கு புலிகளின் ஆதரவில் திரட்டப்பட்ட நிதி அனைத்தையும் சேர்த்தாலே பாதி துன்பத்தை துடைக்கமுடியும். கேபி யிடம் இருக்கும் தொகைப்பணத்தின் விபரத்தினையும், மேலும் உலகம்முழுதும் பரவிக்கிடக்கும் பெருந்தொகையான பணத்தையும் திரட்டினாலே மக்களின் பாதிப்பினை ஈடுசெய்யும் பெரும் பாரம் குறைந்துவிடும்.

சாதாரண அமைப்புக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கலைநிகழ்ச்சிகள், அறிவுரீதியிலான செயற்பாடுகளால் தமக்கு வேண்டிய நிதிகளைத்திரட்ட முயன்றாலும் அது போதாமல் இருக்கும்போது, உலகளாவிய ரீதியில் தொழில் அற்றநிலையிலும் புலிகளால் வாழமுடிகின்றது என்றால்???

புலிகள் தொடர்பாக தத்துவ எழுத்தாளர் என்று (UNGA) “புதிய தலைமுறை ஒன்றியத்தால்” பெருமைப்படுத்தப்பட்ட அருகனின் அவர்களின் 2006ல் “மலருமா தமிழீழம்”  என்ற நாவலில்  இதுதொடர்பான பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அதன் பகுதி பின்வருகின்றது …

அருகனின் “இலங்கையின் போராட்ட காலத்தையும் அதன் இழப்புக்களையும் கணக்கிட்டுப் பார்த்தால், தமிழீழப் போராட்டத்திற்காக இருபக்கத்திலும் இழப்பு அளவுக்கு மீறியதாகவே காணப்படுகிறது. பொருட்சேதங்களை விட்டுவிடுவோம், உயிர்ச்சேதங்களைத் தொட்டுப்பாருங்கள். எமக்குள்ளே கருத்து வேறுபாட்டில் இழக்கப்பட்ட உயிர்கள், அதிலும் இழக்கப்பட்ட புத்தி ஜீவிகளை ஒப்பிட்டுப் பாருங்கள்…!

“சந்தர்ப்பங்களும் சாமர்த்தியங்களும் சாய்ந்து கொடுக்காத போது, உண்மையும், அறிவும் பலன் குன்றிப் போகிறது.”

ஒரு சென்ரி மீற்றர்  கோடு ஒன்றைப் போட்டு விட்டு அதனைத் தீண்டாமல் அக்கோட்டினைப் பெரிதாக்கு என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் அரைசென்ரிமீற்றர் கோடு போட்டாராம். மற்றைய கோடு போடுமட்டும் முன்னைய கோடு சிறிதாகத்தான் இருந்தது; இன்னொன்றோடு ஒப்பிடும் போதுதான் அதன் தன்மை புலப்படுகிறது. அது போலத்தான் உலகத்தில் ஏராளம் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வோர் தேசத்துரோகிகள் என்று கருதப்பட்டு கவிதைகள் பல வெளிவரக்கண்டேன்; அவற்றிற்குப் பாராட்டும் கொடுத்துப் பட்டமும் கொடுத்தார்கள். ஆனால், அக்காலத்தில் இருந்தே எனது கவிதைகளில் வெளிநாட்டுக்குச் செல்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, அவர்கள் சந்ததிதான் ஈழத்திற்கு மிஞ்சப்போகிறது என்றும், வெளிநாடுகளில் இருந்தே எமது வரலாற்றைச் சித்தரியுங்கள் என பல்வேறு கவிதைகள் கட்டுரைகள் எழுதினேன்; அப்போது அது மதிக்கப்படவில்லை. (இருவது வருடத்திற்கும் முன்னர்)

இப்போது நிலமை எப்படிப்போகிறது…

வெளிநாடுகளில் இருந்து குவிகின்ற பணம் தான் போராட்டபின்னணிக்கான வியாபாரத்தைத் தோற்றுவித்துள்ளது.

பல்வேறு இயக்க அமைப்புக்கள் தோன்றுவதை அக்காலத்தில் இருந்தே பலம் பொருந்திய இயக்க அமைப்புக்கள் எதிர்த்து வந்தன. ஆனால், பல்வேறு தொடர்புச் சாதன இலாப அமைப்புக்கள் தோன்றிவருவதையும், அவை மக்களுக்கு வழங்கிவரும் தொடர்புச் செய்திகள் அதிக செலவில் அமைந்த போதிலும், அவற்றைக் கண்டிக்கவோ அல்லது ஒண்றிணைத்து நல்ல சேவையாகத் தொகுத்து வழங்கவோ ஏன் இவ்வமைப்புக்கள்  முன்வரவில்லை.    

“சிறு சிக்கலற்ற விடையத்திலே ஒத்துப் போகாதவர்,
எப்படி பெருஞ்சிக்கலான விடையத்தில் ஒத்துப்போவார்”

எவ்வளவோ கஸ்டப்பட்டு அசாதாரணமாக, நாட்டுச் சூழல் காரணமாகவோ, குடும்பச் சிக்கல் காரணமாகவோ ஒருவன் வெளிநாட்டுக்குள் புகுந்து, அவன் சிறையில் அன்னியன் கையில் அகப்பட்டுக் கிடக்கிறான். இதனைக் காரணமாக வைத்து அமைப்புக்களின் சார்பில் உள்ளவர்கள் அவர்களை வெளியில் எடுத்து விடுவதாகச் சொல்லி பேரம் பேசுகிறார்கள். அகப்பட்டுக் கிடப்பவர்களை பயமுறுத்தி அவர்களை, புரியாத மொழிக்குள் இருக்கும் காரணத்தால், திண்டாட வைக்கிறார்கள். சாதாரணமாக அந்நபரை வெளியில் விட்டதும் இவர் வெளியில் வந்ததற்குத் தான்தான் காரணம் என்று சொல்லி 1000€ கறந்து விடுகிறார்கள். இது அமைப்பின் கணக்க்குள் போய்ச் சேருவதில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. அமைப்பும் இது போன்ற பல தவறுகளைக் கண்டு கொள்வதில்லை. காரணம், அவரைப்போன்று செயற்படுவதற்கு இன்னொருவர் கிடைக்கவல்லவா வேண்டும்.

சரி, ஒரு முக்கிய விடையத்திற்கு வருவோம் தமிழீழம் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இல்லை தமிழீழத் தனிப் பிரகண்டணம் செய்யப்பட்டதாக வைத்துக் கொள்வோம். உலகரீதியில் அதற்கு ஏற்படும் மாற்றங்களையும் உலகரீதியில் அவை அமைப்பதற்குள்ள சட்டங்களையும் பார்க்கும் முன் ….

வீதாசாரத்தில் உலக ரீதியில் தமிழர்களைப் பார்க்கும் போது, இலங்கையில் உள்ள தமிழர்களிலும்பார்க்க அதிகமாக வருங்காலங்களில் புலத்தில் அமைந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற அளவிற்குப் போகிறவேளையில், தமிழர்களுக்கான அதாவது, ஈழத்ததூதராலயம் என்ற ரீதியில், திழீழவிடுதலைப்புலிகள் ஏற்படுத்தப் போகவிருக்கும் அலுவலகங்களைப் பற்றி யாராவது சிந்தித்ததுண்டா? எமது தேவைகளுக்கு இலங்கை அரசிடம் நாடி நின்றது போல் இனி எங்கு போவது? கடவுச் சீட்டுக்கள், விசாக்கள், மற்றும் ஆவணங்கள்… இவற்றிற்கு நாம் கட்டவேண்டிய கொடுப்பனவுகள் இலங்கை அரசிற்குக் கொடுத்ததை விடக் குறைவாகவா கொடுக்கப் போகிறோம்?… இதற்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளை வேற்றுநாட்டவரிடம் இருந்தா கடன் கேட்கப்போகிறார்கள்?…

இலங்கை அரசிடம் இருந்து மீட்டு, நம்மை நாமே கேவலப்படுத்தப் போகிறோமா? அல்லது, இலங்கை அரசு வழங்கிவந்த சேவைகளிலும் பார்க்க பன்மடங்கு புனரமைக்கப்பட்டு கிடைக்கப்போகிறதா? இதையும் பொறுத்திருந்து பார்ப்போம் என்று நையாண்டிச் சாட்டுச் சொல்லும் மக்கள்மத்தியில் எதைச் சொன்னாலும் எடுபடப் போவதில்லை.

வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் கொஞ்சநெஞ்ச கஷ்டங்களாபட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இவற்றையெல்லாம் யார் தீர்ப்பது? தமிழர்களுக்காகவும் தமிழீழத்திற்காகவும் போராட்டத்தில் முன்னணியில் நின்று, இப்போராட்டத்திற்கு மக்களின் பங்களிப்பைக் கேட்டு கொள்ளும் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் தாம் கேட்கவேண்டும். இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு நீதி, உலக ரீதியில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு நீதியா?

“உயிர், என்னதான் செய்தாலும் மனிதநேயத்தின்  முன் ஒன்றுதானே!”

ஆரம்பத்தில் பல இடங்களில் தமிழர்களின் வளர்ச்சியினைப் பாராட்டியிருக்கிறேன். எனினும், நாம் வளர்கிறோம் என்றும், எமக்கு மக்கள் பலம் அதிகம் என்ற வைராக்கியத்திலும், நாம் வேறுநாட்டுச் சட்ட திட்டங்களுக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதனை வெளிநாட்டில் இருப்போர் மறந்து விடக்கூடாது. அதன் கவனக்குறைச்சல் மேலும் தமிழர்களின் வாழ்விற்குப்பங்கம் விளைத்தாலும் விளைக்கலாம்.

ஒரு முறை இத்தாலியில் இருக்கும் ஒரு சேவை அமைப்புடன், தமிழீழத்திற்காகப் போராடும் அமைப்புச் சார்ந்த முக்கிய பிரமுகர் சிலரும் ஒன்று கூடலில் இருந்த போது, தமிழர்களுக்கென தமிழர்களிடம் இருந்து பணம் திரட்டுவது தொடர்பாக பேசப்பட்டபோது அந்த இடத்தில் எழுந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

“தமிழீழத்தில் இருக்கும் கஸ்டப்பட்ட மக்களுக்காக நீங்கள் இவ்வளவு அக்கறையுடன் செயற்படுவது பாராட்டக் கூடியது. எனினும், இங்கிருக்கும் ஒருசிலர் (இத்தாலியில்) அவர்களைப் போல் சிரமப்படுகின்றனரே அவர்களுக்கு…?” என்று இத்தாலியில் உள்ள சேவை அமைப்புக் கேட்டபோது;
“அது அவர்களின் தலையெழுத்து- அவரவர் தேடிக்கொண்டது, நாங்கள் அங்கிருப்பவர்களைத்தான் பார்ப்போம்” என்று பிரமுகர் சார்பில் வந்தவர் அருவெறுப்புடன் பதில் சொன்னார்.

“இங்கிருப்பவர்கள் நல்லா இருந்தால் தானே அவர்கள் மூலமாய் மற்றவர்களுக்கு உதவமுடியும்” என்று மீண்டும் கேட்டபோது…

“அது எங்கட வேலையில்லை” என்று சம்மந்தமில்லாது எதையோ பேசத்தொடங்கினார் அவர்.

இவர்களை நம்பி எப்படி தமிழீழத்தை ஒப்படைப்பது?
இவர்களை நம்பி எப்படி ஆவணங்களை ஒப்படைப்பது?
இவர்களை நம்பி எப்படி அதிகாரங்களை ஒப்படைப்பது?
இவர்களை நம்பி எப்படி அலுவலகங்களை ஒப்படைப்பது?…

இவர்களா வருங்காலத்தில் து}தராலயங்களில் அமரப் போகின்றனர்?
இவர்களா ஆவணங்களில் ஒப்பமிடப் போகின்றனர்?
இவர்களை நம்பியா 30 வருத்திற்கும் மேற்பட்ட போராட்டம் இடம் பெற்றது?
இவர்களை நம்பியா எமது உறவுகளைப் பறிகொடுத்தோம்?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கென்று தமிழீழத்தில் தனி கௌரவம் கொடுக்கப்படும் போது இவ்வாறானவர்களினால், அந்த கௌரவத்தில் கறை விழுந்து விடாதா?

இத்தாலியில் உள்ள ஒரு சில கேவலமான எம்மவரின் வாழ்க்கை முறையினை முறையிட விரும்புகிறேன். காரணம் இவை சீர் செய்யப்படவேண்டும் என்பதற்காக…

(இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் சின்னங்கள் நல்லதொரு எடுத்துக் காட்டுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன என்பதனைக் கருத்திற் கொள்க.)”
என்று அந்த நாவல் செல்கின்றது. எனவே இந்த நாவல் தவறான பாதையில் சென்றுகொண்டிருந்த புலிகளின் புலத்து ஆதரவாளர்களுக்கு தலைவலியாக இருந்தது. எனவே இந்நாவலை புறந்தள்ளினர். இந்நாவலின் பகுதிகளை ஏற்றிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் அவர்கள்கையில் என்பது திண்ணம். – தொடரும்.

இதுதானா மில்லெனிய மாற்றம்? 01 -அருகன்.

clip_image002[1] 

தாக்கம்-1

அழுகுரலும், அங்கலாய்ப்பும் என்பது உலகவரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. என்றாலும், அவ்வப்போது மனித நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்பிலும் பார்க்க, இயற்கையால் ஏற்படும் பாதிப்பென்பது எண்ணிப்பார்க்கமுடியாத வியப்புக்குள்ளும், திகைப்புக்குள்ளுஞ் சிந்திக்கக் கூடியவர்களைத் தள்ளிவிடுகிறது.

இறுதியாக இயற்கையால் நடாத்தப்பட்ட தாக்கம் (“சுனாமி”) சிந்தனை அறிவால் மட்டும் உணர்ந்து கொள்ளக்கூடியதென்பது எனது கருத்து.

இந்த நிகழ்ச்சி நடந்ததென்று தெரிந்த மறுகணம், இதன் தாக்கத்தின் சம்பவம் பற்றி எனது நண்பனுடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். நான் எனது நண்பனுக்குக் கொடுத்த அதே விளைவினைப் பல மணித்தியாலத்தின் பின்னர் கனணித் துணைகொண்டு கற்றறிந்தவர்கள் வெளியிட்டனர்.

இதில் கண்ணுக்குத் தெரிந்த விளைவிலும் பார்க்கக் காலகாலத்துக்கு ஏற்படும் விளைவும் உள்ளடங்கியிருக்கிறது என்பதை நண்பனுடன் தெளிவுப்படுத்தினேன்.

அவற்றை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடனும், இதன் விளைவுகளுக்கான வினாக்கள்-விடைகள்  என்பனபற்றியும், உங்களுடன் கலக்க விரும்புகிறேன்.

இதன் ஆராச்சியை அடுத்துப் பல நாட்களுக்குப் பின் வரப்போகும் முடிவுக்கும், எமது தற்போதைய  முடிவுக்கும் பலத்த வேறுபாடுயெதுவும்  அமையப் போவதில்லை என்பதே உறுதி.

இது ஒரு வகையில் மனோதத்துவத்துடன் இணைந்த ஒரு பகுதியாகவே வெளிப்படுகிறது.

இப்போது நாம்clip_image002 பயன்படுத்திக் கொண்டிருக்கும் உலகப் படவரைபிற்கும,; இன்றிலிருந்து உருவாக்கப்படவேண்டிய உலக வரைபிற்கும் பாரியமாற்றம் இருக்குமென்று உறுதியாக என்னால் சொல்ல முடியும். இதுபற்றி ஏற்கனவே வெளியிடப்பட்ட (2003ல்)   “அநுபூதி” என்னும் நு}லு}டாகவும் பகிர்ந்ததுண்டு.

26.12.2004 அன்று நடைபெற்ற சம்பவமானது, இயற்கை தன் ஆதங்கத்தை வெளிக்காட்டிய ஒரு பகுதி.

இது ஆரம்பமுமல்ல, முடிவுமல்ல் மாறாக இதுவோர் எச்சரிக்கை.!!

எல்லையின் ஆரம்பம்  தொடங்கி முடிவு தெரிகின்ற பூமிபந்தில் நடாத்தப்படும் அதிகார, ஆதிக்க, ஆடம்பரத்திற்கு எல்லையற்ற வல்லமை கொண்ட இயற்க்கைவிடும் எச்சரிக்கை.

clip_image002[5]“பூமிப்பந்து வடித்த கண்ணீர் உனக்குப் புரியவில்லை
அது வெடித்து வடித்த விம்மல்,
உன் கண்ணீரை வரவைத்தது.”

இந்தச் சந்தர்ப்பத்தில், ஏராளமான எனது தனிப்பட்ட கருத்துக்களையிங்கு கொட்டிக் காட்ட விரும்புகிறேன்; அவையிந்தப்பகுதிக்கு மிகவும் முக்கியமானவை.

அப்போது அன்னைத்திரேசாவின் புனிதமான செய்கையில்க் கூட எனக்கு வெறுக்கத்தக்க பெரும் பாரம் இருக்கத்தான் செய்தது; அதுயின்றும் தொடர்கிறது.

இப்போதும் இந்த சம்பவத்தை ஒட்டி நடாத்தப்படும் செய்கைகள் கூட அதை ஒத்ததாகவே காணப்படுகிறது. காரணம் என்னவென்றால், இதன் சாதகத்தைக் காட்டி ஏராளமான அமைப்புக்கள் தம்மை நிதிதிரட்டும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. அரசாங்கங்களும் உட்பட.

வெளிப்பார்வைக்கு வணங்கப்படவேண்டிய விடையம்போல தோன்றினாலும், என்னைப் பொறுத்தவரையில் அது வண்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய விடையம்.

இப்பேற்பட்ட நிதிதிரட்டும் நோக்கத்தில் தம் தடங்களையும் திடப்படுத்தும் பல அமைப்புக்களும் இயங்கப்படுகிறது.

பல மனிதர்களின் பலவீனத்தை உணர்ந்த  சில மனிதரின் நடவடிக்கையைத் தான் சொல்கிறேன்.

மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பால் உருவாகும் பரிதாபத்தைப் பயன்படுத்திப் பல அமைப்புக்கள் பாய் விரித்துப் படுத்துக்கொள்கின்றன. அதற்கு மனிதாபிமானம் என்று பெயர் சூட்டிக்கொள்கின்றனர். clip_image002

திரட்டப்படும் நிதிகள்  பயன்படுத்தப்படும் முறையினைப் பற்றித்தான் பலமாகக் கண்டிக்கிறேன்.
உதாரணமாக 10 பேர் பாதிக்கப்பட்டவர் என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பத்துப் பேருக்கும் தற்காலிக மருத்துவம், உடை, உணவு, உறைவிடம் முதலிய அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் அமைப்புக்கள் பலமாகச் செயற்பட முன்வருகிறது. இவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு 100 யூறோ பணத்தைக்கொண்டிருந்தால், அவற்றைக்கொண்டு குறிப்பிட்ட 10 பேரை தற்காலிகமாகவும், அல்லது 8 பேரை நிரந்தரமாகவும் வாழவைக்க முடியும் என்றால், நீங்கள் எதனைத் தெரிவு செய்வீர்கள். இருவருடைய உயிரிலும் பார்க்க 8 பேருடைய உயிர் மிகவும் அரிதல்லவா. அல்லது 5 பேருக்கு நிரந்தர வாழ்வும் 5 பேருக்குத் தற்காலிக வாழ்வும் வழங்கமுடியாதா?
10  பேருக்கும் தற்காலிக வாழ்வுவழங்குவதால் ஏழை எப்போதும் ஏழையாகவும், பணக்காரர் எப்போதும் பணக்காரராகவுமல்லவா உருவெடுக்கிறார்கள்.
குறிப்பிட்ட காலத்திற்குத் தற்காலிக அத்தியவசிய வசதி செய்வது சரியா? அல்லது, நிரந்தர வாழ்விற்கு வித்திடுவது சரியா?
எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லையென்று ஒதுக்குவோர் யாருண்டு? இலவசமாக எதுகிடைக்கும், இலவசமாக எங்கே கிடைக்கும் என்று தேடுவோர்தான் அதிகம்.

இதனால் தான் அன்னை திரேசாவைச் சற்றுச் சாடினேன். அந்த அன்னையின் முயற்சியென்பது, ஏழ்மை ஒழிக்கப்பட்டதனு}டாக முடிக்கப்பட்டிருக்கவேண்டும். மாறாக, அமைப்பு அதிகரித்ததே தவிர ஏழ்மை ஒழியவில்லை.

“அநாதை இல்லங்களின் அடிக்கற்களைத்
தொழிற்சாலை மையங்களாக்குங்கள்
அகதி முகாம்களின் எல்லைகளை
தேவையற்ற பொருட்களின் கழிவகமாக்குங்கள்!
“ஆதரவற்றவன்” என்ற சொல்லை
அகராதியில் இருந்து தொலைத்துவிட
ஒரு ஒப்பந்தம் போடுங்கள்.”

இப்போது இயற்கையாலேற்படுத்தப்பட்ட தாக்கத்தைச் “சுனாமி” என்னும்பதத்தால் தெளிவுபடுத்தலாம். “சுனாமி” என்பது வேற்றுமொழிச் சொல்லிலிருந்து உருவானது. இதன்கருத்து மாபெரும் அலை எனப்படும். இது உலகத்தின் உட்கருவில் ஏற்படும் தாக்கத்தால் உருவாகும்.
ஏற்கனவே “அநுபூதியூடாக” (அருகனின் 2003 வெளியீடு) இப்பேற்பட்ட சம்பவங்களை விவாதித்திருந்தாலும,; அப்பேற்பட்ட விவாதத்தை உறுதியாக நிலை நாட்டக் கண்ணு}டாக நடாத்தப்பட்ட இந்தச் சம்பவம் தெளிவு படுத்துகின்றது. இருந்தாலும் இதன் செயற்பாட்டை மேலும் தெளிவுறயிந்த அத்தியாயம் கைகொடுக்கும்.

உலக உருண்டையின் மையத்தில் கொதி நிலையிலிருக்கும் நெருப்புக் குளம்பானது, கொதி நிலையின் காரணமாக வெளியிடப்படும் வெப்பத்தால் ஏற்படும் அமுக்கம் கூடும் போது, அது மூச்சு விடக் கஸ்டப்படும் ஒரு உயிரினத்தைப் போல அங்கலாய்க்கிறது. அந்த அங்கலாய்ப்பின் காரணமாகப் பூமியின் மென்மையான பகுதியை அழுத்தமாகத் தள்ளுகிறது. இதன் காரணத்தால் மிதந்து கொண்டிருக்கும் நிலப் பரப்பானது ஒரு பக்கத்தில் இருந்து அசைக்கப்படும் கயிற்றைப் போல் அசைவுறுகின்றது. இதனால் கடல் நீரும் படிப்படியாகத் தொடர் நிலத்தின் அசைவுக்கேற்ப அசைக்கப்படுவதனால் அலையின் அசைவும் வேகமும் உந்தப்படுகிறது. எனவே, கரையினைவந்தடையும் அசைவுநீரானது பலமாக கரையை மோதி பெரும் அலையினை வெளிப்படுத்துகிறது.

மேலும் மென்மையான பகுதியை அசைவுறச் செய்யும் அமுக்கமானது அந்த மென்மையான பகுதியூடாகத் தனது மூச்சினை வெளிக்காட்டமுயற்சிக்கிறது. இந்த வெளிக்காட்டு பாரிய இழப்புகளை ஏற்படுத்தக் கூடியன என்பதை 26ம் திகதி டிசம்பர் மாதம் நடைபெற்ற “சுனாமி” சம்பவம் உறுதிப் படுத்தும்.

இந்த மூச்சின் வெளிக்காட்டு, நெருப்புப் பிளம்புகளிலிருந்து வாயுக்களை வெளியிடும். இந்த  நெருப்புப் பிளம்புகளின் தாக்கமே பல அழிவுகளை ஏற்படுத்தக் கூடியன் அதாவது, வெளிப்படையாகத் தெரியும் ஒரு எரிமலையின் செயற்பாடே இது. அத்தோடு, அதிலிருந்து புறப்படுகின்ற வெப்பக்காற்று  மேலும் பல ஆபத்துகளை ஏற்படுத்திவிடும்.
இந்தச்சுனாமியால் ஏற்பட்ட மக்கள் அழிவைப் பொறுத்தவரையில் தெளிவற்ற முடிவு தற்போது இருந்தாலும் அண்ணளவாக ஒருலட்சத்து இருபத்தையாயிரத்தைத் தொடும் என்று கருதுகிறேன். இங்கு, உடன் இறந்தோர் தொகை ஒருபுறம் இருக்க, தாக்கத்தால் காயம்பட்டோர், பாதிக்கப்பட்டோர் என்று இன்னுமொருபக்கம் இறப்பபாயம் காணப்படுகிறது.

இப்போது நடை பெற்ற சம்பவம்  பெரிதும் மக்களைப்பாதித்ததுடன், நிலப்பரப்பையும், கடல் நீரையும், அதனுள் வாழும் உயிரினங்களின் வாழ்க்கைமுறையினையும்,  காலநிலையினையும் முற்றிலும் மாற்றி அமைக்கக் கூடியது.

2004ன் இறுதியில் ஏற்பட்ட “சுனாமியின்” தாக்கம் என்பது சாதாரணமானதல்ல. மனித இழப்புக்கள,; பொருள் இழப்புகள் போன்றவற்றிலும் பார்க்க அதையுந் தாண்டிய பாரிய இழப்பிற்கும் இடமுண்டு.

எனது எழுத்துக்களின் ஆரம்பத்திலிருந்தே ஒரு விடையத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டே வருகின்றேன். அதாவது:

மனிதனுக்கும், இயற்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பஞ்ச பூதங்களின் ஒன்றினைந்த செயற்பாடே பஞ்ச பொறிகள்; அதாவது மனிதனின் முழுமை.

அதில் ஒன்றிலோ, அல்லது பலதிலோ ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது மனிதனின் உருவத்திலும்   குணத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அதேபோன்று, இயற்கையிலும் ஏற்றதாழ்வுகள் ஏற்படும் போது அதனிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அந்த ஏற்ற தாழ்வுகளை நிவர்த்தி செய்ய முற்படும்போது அதின் விளைவுகள் சிலவேளையில் விபாPதமாக அமைந்து விடுவதுமுண்டு.

ஒவ்வொரு செயற்பாட்டிற்கும், ஒவ்வொரு காரணம் உண்டென்பதனை உணர்கின்றவன் நான்.

மனிதனில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும்போது, அதனை நிவர்த்தி செய்ய இயற்க்கையைப் பயன்படுத்துகின்றான். அது அறிந்தும் அறியாமலும் செயற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக, தாகமாக இருக்கும் போது இயற்கை தரும் நீரினை அருந்தி அதாவது, “இயற்கையை அருந்தி” தாகத்தால் ஏற்படும் தாக்கத்தை தீர்த்துக் கொள்கிறோம்.

மாறாக உடம்பில் நீர் அதிகரிக்கும் போது செயற்கையாகவோ, அல்லது இயற்கையாகவோ உடம்பைவிட்டு நீர்  (வியர்வை,சிறுநீர்…)வெளியேற்றப் படுகிறது.

இயற்கையில் ஏற்றதாழ்வுகள் ஏற்படும் போது, அது மனிதனில் இருந்தும் ஈடுசெய்து கொள்கிறது.

இதேபோன்றே  இயற்கைக்கும் தாகம் எடுக்கிறது. அதாவது, பூமியின்கருவானது 6650 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இரும்பு, நிக்கல் போன்ற பொருட்கள் கொதிநிலையில் காணப்படுகிறது. இதனால், இதிலிருந்து வெளிவருகின்ற அமுக்கம் மேற்பரப்பை தள்ளுகிறது. இதுபற்றி ஏற்கனவே விளக்கம் தந்திருந்தபடியால் தற்போதைய சுனாமியினால் ஏற்படப்போகும் மாற்றங்கள் பற்றிய எனது கருத்தைத் தெரிவிக்க முனைகிறேன்.

இந்தத் தாக்கம் மிகப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. அதாவது வெளிப்படையாக தோன்றும் பாதிப்பு ஒருபுறம் இருக்க மறுபுறம், பூமியின் மேற்பரப்பில் காணப்படும் கண்டத்தில் 20 ஆயிரம் வருடத்தில் படிப்படியாக நடக்கவிருக்கும் மாற்றம் தற்போது குறிப்பிட்ட மணித்தியாலத்தில் இங்கு இடம் பெற்று இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள. தற்போது இடம் பெற்ற இச் சம்பவத்தினால் கண்டங்கள் சற்று நகர்ந்திருக்கக்கூடும். மேலும், கண்ட நகர்வினால் பூமியின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அதன் காரணத்தால் காலநிலையில் பாரிய வேறுபாடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறும் உள. புவி, தன்புவிச்சரிவிலும், புவிச்சுற்றிலும், சூரியனைச் சுற்றும் சுற்றிலுங் கூட மிகக் குறுகிய மாற்றமோ அல்லது மாற்றமோ இடம் பெறலாம்.

இதில் ஒரு முக்கிய விடையம், புவியியல் பற்றிக் கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்காக மட்டுமன்றி சாதாரணமாகவும் புதிய ஓரு உலக வரைபு இன்று அத்தியாவசியமாகிறது.

Thodarum…

தாக்கம்-2 இதுதானா மில்லெனிய மாற்றம்? 01 -அருகன்.

clip_image002 

இப்போது இடம் பெற்ற இந்தச் சுனாமியினால், புவிதன் சமநிலையில் இருந்து தளர்ந்திருக்கக் கூடும். அதனால், எண்ணில்லா மாற்றங்களை நாம் எதிர் நோக்க நேரிடலாம். அதனைப்பார்க்கும்முன் அடுத்த பகுதியாக அலையினைப்பற்றி வரும் பந்திகளைப் பார்த்துவிட்டு மேலும் முன் செல்வோம்.

சாதாரணமாக அலையின் உருவாக்கம் பற்றி வேறு பகுதிகளில் எழுதியிருக்கிறேன். இருந்தும் இந்தப் பகுதியில் அது பற்றி போதிய அறிவு தேவை என்பதால், மீண்டும் ஒரு முறை மீட்க விரும்புகிறேன்.

பொதுவாக, காற்றின் வேகத்தால் அலைகளின் உருவாக்கம் இடம்பெறுகின்றது. இது ஒருவகையான சாதாரண அலை, மேலும் கடலில் (சமுத்திரத்தில்) ஏற்படும் நீரோட்டங்களாலும் ஒருவகை அலை உருவாகின்றது. ஆனால் அலைப்பெருக்கு, வெள்ளப்பெருக்கு என்பன இவற்றை எல்லாம் தாண்டி புவி, சந்திரன், சூரியன் என்பவற்றின் இழுவிசைகளினால் உருப்பெறுகின்றது.

உலகச் சுற்றுகை என்பது ஒரு “ஈற்பு” சக்தியினால் ஆனது. அந்த ஈற்பு என்பது கிரகங்களில் உள்ள உலோகங்களால் உருப் பெறுகின்றது. பூமியின் ஈற்பு விசைக்கும், சந்திரனின்-சூரியனின் என்பவற்றின் ஈற்பு விசைக்கும் இடையில் சமுத்திரநீரானது அசைந்து அல்லல்ப் படுவதே அலையின் அசைவிற்கு முக்கிய காரணம். சந்திரனின் ஈற்பு சக்தியோடு சூரியனின் ஈற்பு சக்தி இணைந்தால் அலையின் தாக்கம் அதிகரிக்கும். சந்திரனின் ஈற்பு ஒருபுறமும், சூரியனின் ஈற்பு ஒருபுறமும் இருந்தால் அலையின்தாக்கம் வேறுவிதமாய் அமையும். எனவே அலையின் அசைவில் செல்வாக்குச் செலுத்தும் பெரும் காரணகர்த்தாக்கள் இவர்களே.

ஆனால் இப்போது இடம்பெற்ற தாக்கம், (சமுத்திரக் கொந்தளிப்பு, அலைப் பெருக்கு) என்பது பூமிக்குள் ஏற்பட்ட மக்மாக் குழம்பின் கொதிப்பால் உருவானது.

இதனால் கடல் நிலத்தில் ஏற்பட்ட தரை மடிப்பு மக்மாக் குழம்பை வெளியிடுவதற்காகப் பிளக்கப்படுகிறது.

இங்கு துண்டாடப்பட்ட நிலத்தில் கடல் நீர் உள்ளிறங்கி அமுக்க வேகத்தால் மீண்டும் பலமாக வெளியேத்தள்ளப்படுகிறது. இவைபோன்ற பல தாக்கத்தால் இந்நிகழ்சி ஏற்பட்டதாகும்.

மேலும் இந்த நிகழ்வு சாதாரணமாக ஒரு சிறிய சுற்று வட்டத்தில் நடைபெற்றதொன்றல்ல, மாறாக பல கிலோமீற்றர் சுற்றளவில் தாக்கப்பட்ட ஒரு சம்பவமாகும்.
இத்தாக்கம் நொடிப்பொழுதில் நடைபெற்றதல்ல, மிகநீண்ட நேரத்தை எடுக்கக் கூடியது. இடம்பெற்ற நிகழ்வு கரையை வந்தடைவதற்கே பல மணித்தியாலங்கள் ஆகியிருக்கும்.

இந்த நேர இடைவெளி என் சந்தேகத்தைக் கிளப்பியது. அதுபற்றி அடுத்து பகுதிகளில் வினாவுகிறேன்.

அந்த சந்தேகத்தைக் கேள்வியாக மாற்றி இங்கு கேட்கிறேன். சில வருடத்தின் முன் இலங்கையில் உள்ள ஒரு மாவட்டத்தில் (கொலன்னாவ) குண்டு வெடிப்புத் தாக்குதல் இடம்பெற்றதை உடனுக்குடன் தொலைக் காட்சியில் வெளியிட்டது ஒரு பிரபலிய உலகத் தொடர்புச் சாதனம், அது (”சற்றலைற்றின்”) செய்மதியின் உதவியுடன்.

அது அப்படி இருக்க, இப்போது இடம் பெற்ற சம்பவத்தை அப்பேற்பட்ட செய்மதி எடுக்கத்தவறியதா? அல்லது தொடர்புச் சாதனங்கள் வெளியிடத் தாமதம் ஏற்பட்டதா??!!

மேலும் முன் கூட்டியே அறிவிக்கும் பல விஞ்ஞானக் கருவிகள் இருக்கும் கணனிக் காலத்தில் இத்தகைய சம்பவம் வருமென்று ஏன் இந்த மக்களை இடம் நகர்த்த வசதி படைத்த நாடுகள் முன்வரத் தயக்கம் காட்டியது.

இத்தகைய கேள்விகளுக்கு ஆரச்சி மையத்தார் அவசரமாக ஏதோ ஒரு பதிலைத் தேடி வைத்திருக்கத்தான் போகிறார்கள்.

ஆசிய நாடுகளில் இத்தகைய அறி கருவிகள் இருந்த போதிலும் அவற்றிலும் பார்க்கத் துல்லியமாக அறியக் கூடியக் கருவியும், வசதியும் மேற்கத்திய நாட்டிலல்லவா உள்ளது.

“இக்கரைக்கு அக்கரைப் பச்சை” என்பார்கள், இங்கு இருக்கும் பிரச்சனைகளை சமாளிப்பதிலும் பார்க்க உலகைவிட்டு வெளிக் கிரகங்களின் பிரச்சனைக்கு முகங் கொடுப்போரே சற்றுப் பொறுங்கள்,…!!!!உங்களுக்கு ஒரு முக்கிய வேலையொன்று இனிவரும் பகுதி தரப்போகிறது.

26-12-2004ல் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தைப் பற்றிசிந்திக்கும் போது வெளிப்படையான தாக்கங்களைப் பல்வேறுபட்ட தொகுப்பாக எடுத்துக் காட்டலாம்.

இருந்தாலும் அத்தியாவசியமானதாக காணப்படுவது என்னவென்றால், சமுத்திரத்தில் உள்ளே பல உயிரினங்கள் முற்றாகவோ அல்லது கூடுதலாகவோ தாக்கப்பட்டிருக்கலாம்.

சமுத்திர நீரில் மக்மாவில் இருந்து வெளிவந்த வாயு கலந்திருக்கும், அது சாதாரண நிலைக்கு வருவதற்குப் பல நாட்கள் எடுக்கலாம்.

கடலுக்குள் இழுத்துச் சென்ற நிலத்தில் உள்ள பொருட்கள் மேலும் உயிர் வாழப்போகும் கடல் உயிரினத்தைப்பாதிக்கலாம்.

புதிய வருத்தங்கள் மக்களைச் சூழக்கூடிய அபாயம் பெரும்பாலும் அமையலாம்.

இதன் விளைவால் பரினாம மாற்றங்கூட விளையலாம்.

மேலும் பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் மாற்றங்கள் அமையலாம், நிலப்பரப்பின் எல்லைகள் மாற்றமடையலாம்.

புவியீற்பு சக்தியில் கணிசமான மாற்றம் அமையலாம் .

இப்படியே சொல்லிக்கொள்ளக்கூடிய பாரிய மாற்றங்கள் கண்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ நிச்சயம் அமைந்தே தீரும்.

பூமி தன் பழைய நிலைக்கு வருவதற்கு படிப்படியாக முயன்று கொண்டே இருக்கும். தன்னைச் சமநிலைப்படுத்தும் முயற்சியை அதைத்தவிர வேறு யாரும் செய்ய முடியாது. எந்த விஞ்ஞானமும் தலையிடவும் கூடாது.

“அப்படி விஞ்ஞானத் தலையீடு அவசியம் என்றுபட்டால் புவியைத்தவிர மனிதன் வாழக்கூடிய இன்னும் ஒரு கிரகம் நிச்சயமாக அண்டத்தில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அதனைக் கண்டு பிடித்தால் போதும். இதை உறுதியாக நான் சொல்வதற்குக் காரணம் பூமியில் இருந்து பல உலோகங்கள் மற்றும் கனியங்கள் மனிதனின் செயற்பாட்டால் பிரிகையடையப்பட்டுள்ளது. எனவே, மனிதன் வாழக்கூடிய தன்மை படிப்படியாக இனி குறைந்து கொண்டு போகும். எனவே, உலகில் இன்னொரு கிரகம் மனிதனுக்காய் ஆயத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் . இதனையும் நான் உறுதியாச் சொல்வதற்கான காரணம், மனிதனை அழிப்பது பூமியினதோ அல்லது உலகத்தினதோ நோக்கமல்ல மாறாக மனிதனை வாழவைப்பதே அவற்றின் நோக்கம். ”

இதில் இயற்கைக்கு ஒரு வகையில் நன்றி சொல்லவேண்டும். ஏனென்றால், சமுத்திரத்தில் ஏற்பட்ட இந்தத் தாக்கம் மாறாக, தரையில் ஏற்பட்டிருந்தால் இதன் விளைவு அதோ கதியாகியிருக்கும்.

அதாவது, நீருக்குள்ளே உந்தப்படும் ஒரு உந்துதலுக்கும், தரையில் உந்தப்படும் அதே அளவான உந்துதலுக்கும் உள்ள தாக்கத்தை யாவரும் அறிவீர். எனவே, தற்போது நடாத்தப்பட்ட சம்பவமானது தரையில் நடத்தப்பட்டிருந்தால் இன்னும்மொரு கண்டப்பிளவுக்குக்கூட வழிவகுத்திருக்கும். அத்தோடு பல தீவுகள், இருந்த இடம் தெரியாமல் புதையுண்டு போயிருக்கும்.

இதன் தாக்கம் சாதாரணமானதல்ல என்பதை இன்னும் பல நாட்களின் பின்னர் இடம் பெறப்போகும் சம்பவங்கள் உங்களுக்குத் தெளிவு படுத்தத்தான் போகிறது.

ஏற்கனவே இது போன்ற பல கடல் கொந்தளிப்புக்கள், எரிமலை வெடிப்புக்கள்,  நில நடுக்கங்கள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அவை புவியியல் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும் இப்பேற்பட்ட கடல் கொந்தளிப்பு, கடலுக்கடியில் ஏற்படும் நில அசைவு போன்றன வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி அதனால் ஏராளம் மக்களைப்  பலியாக்கியுள்ளது.

26 ஒக்டோபர் 1883 ல் இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு 36 ஆயிரம் மக்களைப் பலிகொண்டது.

28 டிசம்பர் 1908 மெசினாவில் இடம்பெற்ற கடல் கொந்தளிப்பின் போது  60 000 பேர் பலியானார்கள்.

இப்படியே சொல்லிக் கொண்டு போகக் கூடிய அளிவுகள் இடம்பெற்றுள்ளது. அதனை வரலாறு நன்கு புலப்படுத்தும்.

அவையெல்லாம் எழுதி முடிந்த வரலாறு. இப்போது தேவை புதியதொரு அத்தியாயம். அது புனிதமாய் எழுதப்பட வேண்டிய அத்தியாயம்.

போர்க் கருவிகள் மண்ணுக்குள் புதைக்கப்பட வேண்டிய அத்தியாயம். உலகத்து இராணுவ வீரர்கள் புதிய இராகம் இசைக்கட்டும். அவர்கள் உடுதுணிகள் பூமணம் வீசட்டும். தீவிர வாதச் சிந்தனைகள் சீர்திருத்தப் படட்டும்.

ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட சில வரிகள் இப்போது மீண்டுஞ் ஞாபகத்துக்கு வருகிறது…

யார் நடத்திய வேள்வியிது?
வேரோடு வெள்ளம் கொண்ட தாகத்துக்குப் -பல
நு}றாயிரம் பேர் மண்ணோடு போராட்;டம்.
இயற்கையின் சமநிலை சீர் கெட்டதோ!!
மரணத்தின் வழியாலே பகிர்வுண்டதோ!!!

ஓ இயற்கையே!!
உன்சீற்றத்தைக் காட்டென்று
யார் கேட்டார்??!!
உன் தோற்றதை காட்டென்று
யார் கேட்டார்??!!
யார் நடத்திய வேள்விக்கு
நாமிங்கு பலியானோம்!!

இத்தோடு உங்கள் போர் கொடிகளை
குளிருக்குப் போர்வை ஆக்குங்கள்.
ஆயுதங்களை விளைநிலத்தில் களை பிடுங்கும்
கருவிகள் ஆக்குங்கள.;
இயற்கையின் அகோரத்திலும் பார்க்க
உங்கள் “பற்று” ஒன்றும் பெரிதல்ல!!!!
ஒரு நொடியில் அழித்துவிடக்கூடிய
அனர்தத்திலும் பார்க்க – உங்கள்
ஆணவ அதிகாரம் ஒன்றும் பெரிதல்ல!!!!

இயற்கையின் சமநிலை பற்றாக் குறைதனை
சீர் செய்யும் அதிகாரம் அதனிடம் உண்டு,
அழிவுக்குக் காரணமான அமைப்புகளுக்கு
இயற்கைவிடும் எச்சரிக்கை தான் இந்த சமிஞ்சை.
போர்க் கொடிகளால் பூமியில்
ஏற்படும் கொதிப்பின் விளைவை
பெருங்கடல் கூட தணித்துக் கொள்ளமுடியவில்லை!!!!
உங்கள் பூஜைகளுங்கூட!!!…
உலகத்தின் ஆதிக்க அதிகார வெறியின் விளைவு
இயற்கையின் அற்ப தும்மலுக்கும் ஒப்பாகாது.
ஆக்கத்தை மட்டும் பொறுப்பெடுங்கள்
அழிவின் பொறுப்பு அனர்தத்திடம் …

தாக்கம் 3