மொட்டைக்கடிதத்தின் மூலம் தனது முட்டாள்தனத்தைக் காட்டிய கைக்கூலிக்காக எழுதப்பட்ட மடல் வரவேற்கத்தக்கதாக இருந்தது. முன்பு தங்கள் தளத்தில் எழுதப்பட்ட முறையற்ற வார்த்தைப்பிரயோகத்தையிட்டு என்னால் எழுதப்பட்ட விமர்சனத்திற்கமைய தங்கள் இணையத்தில் போக்கு மாற்றப்பட்டிருப்பதையிட்டு எழுத்தாளர்களான எமக்குப் பெருமையே! இப்போது, குற்றச்செயல்களிலும், அரசிற்கெதிராகவும், மக்களை குழப்பி தாம் குளிர்காய்வோருக்கும் தங்கள் தளம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்பது திண்ணம். அவ்வாறான ஆக்கத்தை அதிலும் முறையான வார்த்தைப்பிரயோகங்கள் மூலம் குற்றவாளிகளின் மூக்கையும் உடைத்ததோடு, தமிழ்ப்பண்பையும் காட்டியுள்ளீர்கள். ரணீலின்-கைக்கூலி-பப்டிஸ்
Erimalai.org என்ற இணையத்தளத்தில் சென்ற ஒக்டேபர் இரண்டாம் திகதி பிரசுரமாகியிருந்த ஒரு கைக்கூலி தொர்பாக அப்பட்டங்களை முன்வைத்தாலும், அதனை முன்வைத்த முறை தமிழர்களின் மற்றும் எழுத்தாளர்களின் பண்பை நிலைநாட்டியதோடு, குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்திருந்தது.
குற்றச்சாட்டுகளை எத்தனைதூரம் வெளிக்காட்ட முனைந்தேனோ அத்தனைதூரம் பாராட்டவும் பின்தங்கமாட்டேன். மக்களுக்குத் தாங்கள் வெளிக்கொணரும் களவாடிகளின் ஈனச்செயல்களின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும். அது யாராக இருந்தாலென்ன!!! இவ்வாறான அறிக்கைகள் வரவேற்கத்தக்கது, அத்துடன் மக்கள் குற்றவாளிகளை இனங்கண்டு சுற்றவாளிகளை ஆதரிக்கவும் துணைபுரிகின்ற உங்கள் சேவை பாராட்டக்கூடியது.
ஒரு எதிர்க்கட்சி, அரசின் தவறான திட்டங்களை விமர்சித்து சரியான வழிக்கு அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துணைபோக வேண்டுமேயொழிய, அரசைக்கவிழ்ப்பதற்கோ, அரசின் சரியான திட்டத்தை முறியடிப்பதற்கோ நடவடிக்கைகளை மேற்கொள்வது தகுந்ததல்ல என்பதனை எதிர்க்கட்சித்தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சிகளை ஆதரிப்பதற்காக பிற கட்சிகளை இணைப்பதிலும் பார்க்க அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி தேசியத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டாலே அடுத்த தேர்தல்களில் மக்களின் பார்வை பதியப்படும் என்பதனை எதிர்க்கட்சித்தலைவர் இத்தனை அரசியல் சதுரங்கத்தை பார்த்தும் புரிந்து கொள்ளவில்லைபோலும்.
மேலும் “உங்களுக்கு ஞாபகம் இருக்கும் நாங்கள் முன்பொருதடவை உங்களுக்கு இப்படியான செயற்பாடுகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி சந்தர்ப்பம் வழங்கியிருந்தோம்இ ஆனால் நீங்கள் திருந்தவும் இல்லை மனம் வருந்தவுமில்லை. எவராக இருந்தாலும் நடந்துவந்த பாதைதன்னை திரும்பிப்பார்க்க வேண்டும்இ அப்படி திரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு கசப்பான அருவருப்பான வரலாறுகளைக் கொண்டிருக்கும் நீங்கள்இ உங்களுடைய எஜமான் ரணிலின் கயிறுகளை விழுங்கிக் கொண்டு எமது மாநகரசபையைக் குழப்பியடிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்.” என்று குறிப்பிட்டிருப்பது, மக்களின் கூக்குரலாகவே நான் கருதுகின்றேன். அதாவது, ஏற்கனவே புண்பட்டிருந்த மக்கள் இப்போது ஆறுதலை எதிர்பார்க்கின்றனர்.
அது இன்றுள்ள இந்த அரசாங்கத்தின் போக்கிலும் மட்டு மானகரசபையின் செயலிலும் திருப்திகொண்டுள்ள மக்கள் தமக்கு எதிராகச்செயற்படுவோரைக்கண்டு விடும் எச்சரிக்கையாகவே எனக்குப்படுகின்றது. அதாவது, கடந்த காலங்களில் மட்டுமுதல்வர் தலைமையிலும் அமைச்சர் வி. முரளிதரன் தலைமையிலும் பல்வேறுபட்ட அபிவிருத்திநடவடிக்கைகள் மற்றும் கல்வி, கலை, கலாசார முன்னெடுப்புக்களை கண்டு திருப்திகொண்ட மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த புன்னுருவிகள் செய்யும் செயல்களே இவ்வாறான என்பதனை மக்கள் நன்குபுரிந்துகொள்கின்றனர்..
மென்மேலும் இவ்வாறான குட்டுகளை புட்டுப் புட்டாகவைக்க, கட்டுக்கட்டான வாழ்த்துக்களை மக்கள்சார்பில் கொட்டிக் கொட்டித்தருகின்றேன். – அருகன்.