Archivio delle Categorie: முக்கிய செய்திகள்

சங்கிலியன் சிலை “திறந்து” வைக்கப்பட்டதல்ல, “புனர்மைக்கப்பட்ட” என்ற பதமே பயன்படுத்த வேண்டும்…

224405_10150403412698902_823993901_10465615_3603573_n269400_10150708312750013_671695012_19404212_6847355_nசில தமிழர்களுக்கும், சில ஊடகங்களுக்கும் பொறுமையே இல்லை என்பதனை கடந்த காலங்கள் நிரூபித்தே வருகின்றன…  அதுவாகில் சங்கிலியன் தொடர்பாக எத்தனை போடுபோட்டார்கள்!!! கடைசியில்  நடந்துள்ள முக்கிய தவறை திருத்த முன்னர மறுக்கின்றார்கள். அதுவாகில் சங்கிலியன் சிலை “திறந்து” வைக்கப்பட்டதல்ல, “புனர்மைக்கப்பட்ட” என்ற பதமே பயன்படுத்த வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டி அதனைத் திருத்த யாரும் “தலைவர்கள், தேசியவாதிகள், தமிழ்பற்றாளர்கள்… முன்வராதது ஆச்சரியத்தைத்தருகின்றது.

எதையுமே முழுமையாக முடிக்கும் Sangiliyanபழக்கம் எமது உறவுகளிடம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இதில் ஒரு வேடிக்கையும் இருக்கத்தான் செய்கின்றது… அந்த சிலை திரை நீக்கம் செய்த போது கூட்டமைப்புச் செல்லவில்லையாம். காரணம்  டக்ளஸ் திறந்துவைப்பதாலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தது. “தமிழீழத்தை” “சிங்களவனிடம்” இருந்தே பெறப்போகின்றோம்… அதில் தன்மானம் தெரியவில்லையாம், தமிழன் ஒருவன் திறந்து வைத்தால் செல்லமாட்டார்களாம்… அந்த தமிழனை மட்டுமல்ல எந்தத்தமிழனையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே என்றும் தமிழர்களின் உண்மை நிலை.

ஊளையிடும் தமிழ் அரசியல் வாதிகளளே!!!

ஊளையிடும் தமிழ் அரசியல் வாதிகளளே!!!

“சாணக்கியம் என்பது, அரசியலின் ஆணிவேர், முற்போக்கென்பது ஆட்சியின் அத்திவாரம்…” – அருகன்

pim2பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஊளையிடுவதை விடுத்து, புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் இலங்கைப் பிரஜைகளே என்பதனைக் கருத்தில் கொண்டு அவர்களும் வாக்குப் போடும் உரிமையினையும், அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தாலே வடக்குக் கிழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இருப்பதைவிட கூடுதலாக்கப்பட வேண்டிய கட்டாயம் அரசிற்கு ஏற்படும் அல்லாவா?

Leggi l’articolo completo

மின்னியல் ஆவணங்களாக மாறிவரும் புதிய நடவடிக்கைகள்…

telematicஇத்தாலி அரசானது தற்போது அனைத்து நடவடிக்கைகளையும் மின்னியல் ஆவணங்களாக மாற்றி வருகின்றது. இந்நடவடிக்கையானது, மக்களின் சிரமங்களையும் வேலைப்பழுக்களையும் குறைப்பதோடு, ஆவணங்கள் அனைத்தும் சிறப்பாக அமையவும், தவறுகள் ஏற்படுவதனை கணனி அனுமதிக்காததால் சரியான முறையில் ஆவணங்கள் பத்திரப்படுத்தவும் உதவியாக அமையும். அத்துடன் நீண்ட நாட்களுக்கு முன்னர் மேற்கொண்ட ஆவணங்களைக்கூட மீண்டும் பிரதி செய்து பெற்றுக்கொள்ள வழி சமைக்கின்றது. இருந்தாலும் சில சிக்கலும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதனை மறுக்க முடியாது.

அத்துடன் புதிய நடைமுறையாக தற்போது உள்ள வெளிநாட்டவர்களுக்கான விசாவிற்கான புள்ளி அடிப்படையில் அவரவர் செயற்பாடுகளை கண்காணிக்கும் முறையும் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது. அதுவாகில் சாரதி பத்திரத்திற்கு இருக்கும் முறையைப்போன்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இத்தாலி வாழ் தமிழர்கள் தமது செயற்பாடுகளை சரியான முறையில் புதிய நடைமுறைக்கேற்றவாறு தம்மை ஆயத்தம் செய்ய வேண்டப்படுகின்றீர்கள்.   

“சந்திரனுக்கு நாயை அனுப்பிய கதையாக”

தமிழ்நாட்டுத் தமிழர்களின் குள்ளத்தனத்தை அறியாத ஈழத்தமிழர்கள் இன்னும் அவர்களை நம்பியே பல விடயங்களை மேற்கொள்கின்றனர்.

“சந்திரனுக்கு நாயை அனுப்பிய கதையாக” முதலில் ஈழத்தமிழர்களைப் பலிகொடுத்துப் பார்ப்போம், சரிவரும் பட்சத்தில் தமக்கு தனிநாட்டைக் கேட்போம் என்ற ரீதியில் நடந்துவருகின்ற குள்ளத்தனத்திற்கு பலிக்கடாக்களானது விடுதலைப் போராட்டமும், விடுதலைப் புலிகளும், அவர்களின் பலமான கட்டமைப்பும், ஈழத்தமிழ் மக்களின் முன்னைய வாழ்க்கையும்…

Leggi l’articolo completo

ஈழத்தின் கொலைக்களம்

ஈழத்தின் கொலைக்களம் Nanri youtube

ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது…

king-300x200தமிழர்களுக்கு குறிப்பாக ஊடகம் என்ற பெயரில் தமிழ்மக்களை பகடைக்காய்களாகப்பயன்படுத்தி தம்மைப்பிரபல்யப்படுத்தி தாமே தேசப்பற்றாளர்கள் என்றும், தாம்தான் போராட்டத்தை வழிநடத்தி வருபவர்கள் என்றும் மிகைப்படுத்தி வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தி… இறுதியில் எல்லாம் சூத்தைக்கத்தரிக்காயானது.

சங்கிலித்தொடராக சங்கிலியன் சிலைபற்றி பேச்செடுத்தவர்கள், அதனைச் சீர் செய்வதற்கு முனைந்தவர்களையும் உதார்சீனம் செய்து, இத்தனைகாலமும் மக்கள் அழியும் போது தெரியாத சங்கிலியன் வாரிசாம்… அவரையும் அறிமுகம் செய்து… அப்பப்பா என்ன பரபரப்பு… இப்ப என்னண்டா அது மிகச்சிறந்த தோற்றத்தோடே கம்பீரமாகக்காட்சியளிக்கப்போகின்றது என்ற செய்தியை மட்டும் மௌனித்து வருகின்றார்கள் அந்த பழைய ஊடகங்கள்.

உள்ளதை உள்ளபடி எழுதவேண்டியது ஊடகத்தின் பணியல்லவா??? இன்னும் எத்தனை காலம்தான் திசைமாறிய ஊடகங்களை மக்கள் பார்க்கப்போகின்றார்களோ தெரியவில்லை!???

இந்த குறை கூறும் ஊடகப்பாணியில் இருந்தும், குறைகூறும் தமிழ்ப்பண்பற்ற செயற்பாட்டில் இருந்தும் எப்போதுதான் இவர்கள் நிறுத்தப் போகின்றார்களோ தெரியவில்லை. “ஆடு அறுப்பதற்கு முன்னர் எதுக்கோ ஆசைப்பட்டமாதிரி” அடிச்சுப்பிடிச்சு சங்கிலியன் சிலைபற்றி எழுதித்தள்ளியவர்கள் தமிழ் அரசியல் கட்சி என்ற பேரில் மக்கள் படும் கஸ்டங்களுக்குத் தீர்வு தொடர்பாக வெறும் வாய்ஜாலம் காட்டுபவர்களுக்கு ஒரு போடுபோட்டால் மகிந்த அரசு செய்யும் வேலைத்திட்டங்களிலும் பார்க்க அதிக நன்மைகளை தாக்கமடைந்த மக்களுக்கு வழங்கலாமே?

மக்கள் வாழ அல்லல்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த தமிழ் நாட்டுக் கூத்தாடிகள் முள்ளிவாய்க்கால் தூபி கட்டுகினமாம். முள்ளிவாய்க்காலை ஈழத்தில் அல்லவா கட்டவேண்டும் அதை தமிழ் நாட்டில் ஏன் கட்ட வேண்டும். அதைக்கட்டுவதற்குப்பதிலாக அந்த நிதியை வைத்து பத்து குடும்பங்களுக்கு (ஈழத்தமிழ்) தொழில் வாய்ப்பை வழங்கி ரிரந்தர எதிர்காலத்தை கற்றுக்கொடுக்கலாமே!!!

“எப்போதாவது திருந்துவோம் என்று பார்த்தால் , நாம் எப்போதும் திருந்தாதபடிக்கு எம்மை வைத்து தம்புகழையும், பிழைப்பையும் நடத்தவே பார்க்கின்றனர்.

என்ன கொடுமையப்பா??? 

!

1st collector for !
Follow my videos on vodpod

தமிழீழப் போராட்டத்தில் உண்மைக்கும் சேவைக்கும் நடுநிலைக்கும் வெகுதூரம்…Arugan…

தமிழீழப் போராட்டத்தில் உண்மைக்கும் சேவைக்கும் நடுநிலைக்கும் வெகுதூரம்… “நீங்கள் நினைச்ச நேரம் தூக்கிப்பிடிப்பீங்கள், நீங்கள் நினைச்ச நேரம் தூக்கி எறிவீங்கள்…” தமிழர்கள் எந்த நிலைக்கு வந்து விட்டார்கள் பார்த்தீர்களா?

Leggi l’articolo completo

விடுமுறைக்கு வேறு நாடுகளுக்குச் செல்ல உத்தேசமுடைய இத்தாலி வாழ் தமிழர்களே!

வணக்கம் இத்தாலி வாழ் தமிழர்களே!

தற்போது விடுமுறை காலம் ஆரம்பிப்பதால் அவ்விடுமுறைக்கு வேறு நாடுகளுக்குச் செல்ல உத்தேசமுடையோர்கள் தங்கள் இத்தாலி விசாக்களை கவனித்து பயணத்தைத்தொடருமாறு வலியுறுத்தப்படுகின்றீர்கள். இதுவாகில்,

எலற்றோனிக் காட் அல்லததகாகித விசாக்களை உடையோர்கள் இன்னும் தமது விசாக்களை புதிய நடைமுறைக்கு மாற்றாது இருப்பவர்கள் திரும்பி இத்தாலிக்குள் வரும்போது சிக்கலை எதிர்கொள்ளலாம்.

விசாக்களை புதுப்பிக்க விண்ணப்பித்தோர்கள் தமது விண்ணப்பத்திற்கான பற்றுச்சீட்டுடன் பிரயாணத்தை மேற்கொள்ளலாம். முக்கியமாக எல்லையினைத்தாண்டும் போது அதில் வெளியேறுவதற்கான எல்லை முத்திரை பதித்து வெளியேற வேண்டும்.

புதிதாக இத்தாலிக்குள் வந்தவர்கள் கடவுச்சீட்டில் விசா முடிவடையாது இருந்தால் மட்டும் பற்றுச்சீட்டுடன் பிரயாணத்தை மேற்கொள்ளலாம்.

இதுதொடர்பாக மேலதிக தகவல் அறிய விரும்பின் தொடர்பு கொள்ளவும்.  arugan@live.com

இத்தாலி தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்…05/07/2011

இத்தாலி தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்…
தமிழர்கள் யாராவது தொழில் வழங்குனராக Colf / Badante  ஒப்பந்தங்கள் செய்திருந்தால் இந்த மாதம் 10ம் திகதிக்குள் (10/07/2011) அதற்கான வரிப்பணத்தை (2°/2011) கட்டியாக வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளவும்.

மேலும் ஏற்கனவே செய்திருந்த ஒப்பந்தங்களை பரிட்சித்துப்பார்ப்பதற்கோ அல்லது ஒப்பந்தங்களை நிறுத்திக்கொள்வதற்கோ அல்லது புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கோ எம்மிடம் அதற்கான தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்லாம். மேலும் பலனடைந்தவர்கள் இதுதொடர்பான தகவல்களையும் எமது இணையத்தையும் மற்றவர்களுக்கும் தெரிவிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.  – arugan@live.com